பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கை முழக்கம் இதன் பிறகு புதிய கட்சியின் கொள்கைகள்' என்ற தலைப்பில் இன்னெரு துண்டுப் பிரசுரமும் வெளியிட்டார் பாரதியார். புதிய கட்சியார். என்று அழைக்கப்பட்ட திலகர் கட்சியினர்-தீவிரகட்சியினர்- என்ன சொல் கின்றனர்? ஏன் சொல்கின்றனர்? அவ்வாறு சொல்லக் காரணம் என்ன? இன்னேரன்ன விஷயங்களையெல்லாம் விரிவாகவும், விளக்கமாகவும் தெரிவிக்கிரு.ர். திலகர் பெருமான் நிகழத்திய அரசியல் விரிவுரையின் தமிழாக்கம் இது. தமிழில் தந்தவர் பாரதியார். சூரத்துக்குப்பின் பாரதியார் செய்த குருவளிப் பிரச்சாரத்துக்கு இஃது ஒர் எடுத்துக்காட்டு. அதை இப்பொழுது காண்போம். நம்முடை, ய ராஜாங்க விவகாரங்களின் சம்பந்தமாக இப்பொழுது இரண்டு புதிய வார்த்தைகள் ஏற்பட்டிருக் கின்றன. அதாவது, நிதானஸ்தர்கள் தீவிரஸ்தர்கள் என்ற வார்த்தைகளேயாம். இந்த இரண்டு வார்த்தை களும் காலசம்பந்தமான குறிப்பையுடையன. ஆதலால், இவற்றின் அர்த்தங்களும் காலம் மாற மாற மாறிக் கொண்டே வரும். இன்றைக்கு தீவிரக் கட்சியார் என்று