பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

麓麓5 களை வாங்காமல் இருப்போம். தீர்வை வசூல் செய் வதிலும் அமைதி பாதுகாப்பதிலும் அவர்களுக்கு நாம் உதவி செய்யாமலிருப்போம். (அதாவது ரெவினியூ இலாகாவிலும் போலீஸ் இலாகாவிலும் வேலை பார்க்க மாட்டோம்.) இந்திய ரத்தத்தையும் இந்தியப் பணத் தையும் செலவிட்டு நாட்டிற்கு வெளியே அவர்கள் சண்டையிடுவதில் நாம் சகாயம் செய்யாமலிருப்போம். (அதாவது ராணுவத்தில் சேரமாட்டோம்.) நீதி பரிபாலனம் செய்வதில் அவர்களுக்கு நாம் உதவி செய்ய மாட்டோம். நமது சொந்த நீதி ஸ்தலங்கள் ஏற்படுத்திக் கொள்வோம், காலம் வரும் பகrத்தில் தீர்வையும் கொடுக்கமாட்டோம் என்று சொல்லி விடுவோம். இப்பொழுது உங்களின் ஐக்கிய முயற்சியில் இவ்விதம் நடத்த முடியுமா? முடியுமானல் நாளேமுதல் சுவாதீன மடைந்து விடுவீர்கள். இன்று சாயந்திரம் பேசிய ஒரு கனவான் முழுரொட்டி கிடைக்காத விஷயத்தில் அரை ரொட்டியாவது கிடைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஒரு திருஷ்டாந்தம் சொன்னர். நான் முழு ரொட்டியும் கிடைத்துத் தீரவேண்டும் என்றும், அதுவும் உடனே வேண்டுமென்றும் சொல்லுகிறேன். ஆனல் முழுவதும் கிடைக்காதபrத்தில், எனக்குக் காத்திருக்கும் இயற்கை கிடையாதென்று நீங்கள் நிக்னக்கவேண்டாம். பாதி ரொட்டியை எடுத்துக்கொண்டு பிறகு மற்ருெரு பாதிக்கு முயற்சி புரிவேன், இந்த வழியான ஆலோசனை யிலும், முயற்சியிலும் நீங்கள் பழகிக்கொள்ள வேண்டும். நாங்கள் வெறும் ஆத்திரத்தின் பேரில் இந்தச் சத்தம் கிளப்ப வந்து விட்டோமென்று நினைக்க வேண்டாம். இது தீர்க்காலோசனையின் பேரில் ஏற்பட்ட ஆத்திரம். நீங்கள் குருட்டுத்தனமாக நாங்கள் சொன்னபடியெல்லாம் கேட்க வேண்டுமென எங்களுக்கு விருப்பமில்லை. விஷயம்