பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 யும் பொய் ரிப்போர்ட்டுகள் தயாரித்து எழுதி வருகிருt. தென்னுற்காடு சூபரிண்டெண்டெண்டு டிப்டி சூப்ரிண் டெண்டெண்டு எழுதும் தப்பு ரிபோர்ட்டுகளை மறுத்து அச்சாபீஸின் உண்மையான சங்கதிகளை அடிக்கடி மேலதி காரிகளுக்குத் தெரிவித்து வருகிரு.ர். அந்த அச்சாபீஸின் சொந்தக்காரர் பேரில் எப்படியாவது ஒரு கேஸ் கொண்டு வர வேண்டியது என்றும், அதற்காகத் தான் கொடுக்கும் இரண்டு ரிவால்வர்களை அவர் (இந்தியா சொந்தக்காரர்) சென்னைக்குப் பிரயாணமாகும்பொழுது அவர் போகும் வண்டியில் அவருடைய மூட்டைகளுடன் வைத்துவிட்டால் தானும் தன்னைச் சேர்ந்தவர்களுமாக கண்டமங்கலம் பிரிட்டிஷ் சுங்க இலாகாவில் வந்திருந்து அரஸ்ட் செய்து தன் பொய் ரிப்போர்ட்டுகளை வாஸ்தவமென்று நம்பும்படி செய்யவும் இன்னும் ப்ரமோஷனடையவும் செளகரியமா யிருக்குமென்று சொன்னர். நான் இவ்வித துரோகச் செய்கைகள் செய்ய முடியாதென்றும், இது பிரெஞ்சு எல்லை என்றும், பிரிட்டிஷ் ஆபீஸராகிய நீர் இவ்விதம் செய்ய நினைப்பது தப்பு என்றும் சொல்லி மறுத்து, கண்டித்துவிட்டேன். ஆகையால் இந்த டிப்டி சூப்ரின் டெண்டெண்டு போன்ற போலீஸ் ஸி. ஐ. டி. உத்தியோ கஸ்தர்களின் விஷயத்தில் நம்மவர்கள் அதிக ஜாக்கிரதை யுடன் இருக்க வேண்டும் என்ற கருத்துடன் இதை வெளிப்படுத்தினேன். மேலும், இதைப் பற்றி டிப்டி சூப்ரிண்டெண்டின் மே ல் உத்தியோகஸ்தர்களாகிய இன்ஸ்பெக்டர் ஜெனரல், டைரக்டர் ஜெனரல் முதலிய வர்கள் என்ன முயற்சி எடுத்துக் கொள்கிருர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், இவ்விதமான அவரது பொய்யான அமிதச் செய்கைகளை எல்லாம் மறுக்கிறேன்." (இன்பார்மர் புதுச்சேரி, பாரதி புதையல்- (ரா. அ. ப) . இரண்டாம் பாகம் பக். 327)