பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரத்துச் சூருவளி சென்னப்பட்டணத்து ஸென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து 21-ந் தேதி சனிக்கிழமையன்று மாலை சென்னப் பட்டணத்துப் புதிய கட்சிப் பிரதிநிதிகளிலே சுமார் 30 பேர் புறப்பட்டோம். தஞ்சாவூர் கே. ராமஸாமி அய்யர், தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை, சென்னப் பட்டணத்தி லிருந்து சக்கரைச் செட்டி , பி. ஏ. பி. எல், துரைசாமி அய்யர் எம். ஏ. பி. எல், சங்கர நாராயணய்யர், வெங்கட ரமணராவ், யதிராஜ் சுரேந்திர நாத், நான் முதலியவர் களும், திருவல்லிக்கேணியிலிருந்து சில பிரபுக்களும், வெளியூர் கனவான்கள் சிலரும் எங்கள் கூட்டத்திலே சேர்ந்திருந்தனர். ஸ்டேஷனுக்கு எங்களுடைய சிநேகிதர் களும், சுதேச பக்தியின் விசேஷத்தினல் எங்களைப் பிரியத் துடன் உபசரித்தனுப்ப வந்த கனவான்களும் நாளு திசை களிலிருந்தும் வந்து சேர்ந்திருந்தார்கள். ஸ்வதேச விசுவாசத்தையே ஆவேசமாகக் கொண்டவர்களும் பாரத நாட்டின் எதிர்காலத்து ஸ்ம்ரக்ஷகர்களுமாகிய வாலிபர்கள் வந்து எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை விளைவித் தார்கள். சுமை வண்டிகளை எங்களுடைய அறைகளுக்கு இழுத்து வருவதற்கு நாங்கள் கூலிக்காரர் வைத்திருந்த போதிலும், சில குணசாலிகளான வாலிபர்கள் அந்த வண்டிகளைத் தாமே இழுத்து வந்தார்கள். வந்தே மாதர முழக்கம். கொஞ்சமில்லை. அவர்கள் அன்பு நிறைந்த