பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைவிடாது செய்து வரும் ஆராய்ச்சியினாலும் உயர்ந்த மேதையினாலும் நமது பூர்வீகமான ஜாதி தர்மத்தின் உட்கருத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு நமது தற்காலப்பிரிவுகளைக் கண்டிக்கிறார். புராதன தர்மமே பின்பற்றத் தக்கது. ஹிந்துக்களாகிய நாமெல்லோரும் இவருடைய உபதேசப்படி நடந்தால் நன்மையுண்டர்கும். இப்போதுள்ள ஜாதி விரோதங்களும் தாழ்வுகளும் நீங்கி எல்லோருக்கும் மேன்மையுண்டாகும்’ என்று மகாகவி எழுதுகிறார்.

மகாகவி மேலும் எழுதுகிறார்.

ஒருவன்தான் பிராமணனாக வேண்டுமென்று கருதினால் அவன் உண்மை ஆராய்ச்சியே முதற்காரியமாகக் கொண்டு வாழக்கடவான் rத்திரிய பதவி வேண்டுமானால் தன்னுயிர்க்கிரங்காமல் மன்னுயிரைக் காப்பதே விரதமாகக் கொண்டு வாழக்கடவான். இங்ஙனமே மற்றவையும் கொள்க.

குணத்தாலும் தொழிலாலும் ஏற்படுகிற மேன்மையைக் கண்டு யாரும் பழிகூறி இடம்ல்ெலை. குணத்திலும் தொழிலிலும் கடைப்பட்ட ஒருவன் பிறப்பைக் காரணமாக வைத்துக் கொண்டு, ‘நான் மற்ற வரைக் காட்டிலும் உயர்ந்தவன்’ என்று சொல்லும் போது மற்றவருக்குக் கோபம் உண்டாகிறது.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலாதார்

என்று, தாம் வள்ளுவர் மரபில் பிறந்தாலும் நமது முன்னோரால் பிரமதேவனுடைய அவதாரமென்று போற்றப்பட்ட திருவள்ளுவநாயனார் சொல்லுகிறார். ஒருவன் குண கர்மங்களால் பிராமணனாக இருப்பானாகில் அவனுக்கு நாட்டில் முதலாவது மதிப்புண்டாதல் பொதுவாக எல்லா தேசங்களிலும் இயற்கையாக நடந்து வரும் நெறி. ஏனென்றால் எல்லாத் தொழில்களுக்கும் சாஸ்திரமே நேத்திரம். சரீர இன்பங்களைத் தேடுவதே முதற்காரியமாகக் கொண்ட மனிதர் மிகுந்து போயிருக்கும் இவ்வுலகத்தில் சிலர் அந்தப் படியைக் கடந்து மேல் ஏறிப் போய் உண்மை ைதேடுவதே முதற்காரியமென்றும் மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான் என்று உணர்ந்து நடப்பாராயின் அவதர தலைமக்கள். மற்ற வருணத்து நெறிகளையும் இப்படியே வகுத்தறிந்து கொள்ளுதல் எளிது.

பறையர்: பறையர் என்னும் தலைப்பில் மகாகவி பாரதியார் எழுதுகிறார்.

‘பறையர்” என்பது மரியாதை உள்ள பதம் இல்லை என்று கருதி இக்காலத்தில் சிலர் பஞ்சமர் என்ற சொல்லை அதிகமாக வழங்குகிறார்கள். நானும் சில சமங்ப்களில் பஞ்சமர் என்ற சொல்லை வழங்குவது உண்டு. ஆனால் பறையர் என்பதே மேற்படி ஜாதியாருக்குத் தமிழ்நாட்டில் இயற்கையாக ஏற்பட்டபெயர். பறை என்பது பேரிகை. பூர்வகாலத்தில் நமது

137