பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுடையோராய் விடுவார்கள். மாம்ஸ் போஜனம் செய்யும் வகுப்பினர் அதை நிறுத்திவிட வேண்டும். பிறகு ஸ்வாமி விவேகானந்தர் சொல்லியபடி எல்லோரையும் ஒரேயடியாக பிராமணராக்கி விடலாம். கீழ் ஜாதியாரை நல்ல ஸம்ஸ்காரங்களால் பிராமணர்களாக்கி விட முடியும் என்பதற்கு நம்முடைய வேத சாஸ்திரங்களில் தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. அந்தப்படி இந்தியா முழுவதையும் பிராமண தேசமாகச் செய்து விட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்ராயம். எந்த ஜாதியாக இருந்தாலும் சரி அவன் மாம்ஸ்பrணத்தை நிறுத்தும்படி செய்து அவனுக்கு ஒரு பூனூல் போட்டு காயத்ரி மந்திரம் கற்பித்துக் கொடுக்கப்பட வேண்டும். பிறகு அவன் பிராமணனாகவே கருதப்பட வேண்டும். இதுதான் விவேகானந்தர் சொல்லிய உபகாயம் கூடிய வரை நல்ல உபாயமும் கூட. ஆனால் மேல் வகுப்பினர் தம்முடைய உயர்வை மறந்து கீழ்வகுப்பினருடன் கலத்தல் இதனிலும் சிறந்த உபாயமாகும்’ என்று நகைச்சுவை ததும்ப மகாகவி பாரதியார் எழுதுகிறார். ஜாதி வேறுபாடு காட்டப்படுவதைக் கண்டித்து இவ்வளவு தெளிவாகவும் தீர்க்கமாகவும் மகாகவி பாரதி பேசுவதைப் போல் இதுவரை யாரும் பேசியதில்லை.

‘பிராமணரல்லாதார் கிளர்ச்சி பற்றி

பிராமணர்- பிராமணரல்லாதார் என்னும் போலியான பொய்யான வேடிக்கையான பெயரில் தமிழகத்தில் ஒரு இயக்கமும் கிளர்ச்சியும் நடந்து வருவதைப் பற்றி அதை நிராகரித்து உண்மை நிலையை விவரித்து மகாகவி பாரதி மிகவும் அருமையான தொரு கட்டுரை எழுதியுள்ளார்.

‘இந்தியாவின் மற்றப்பகுதிகளை காட்டிலும் நமது சென்னை மாகாணத்தில் தான் ஜாதி பேதத்தைப் பற்றிய பன ஸ்தாபங்கள் இப்போது அதிகமாக முளைத்திருக்கின்றனவென்பது அந்த மனஸ்தாபனங்கள் ராஜரீக விவகாரங்களிலும் கூடப் புகுந்து தேச விடுதலையாகிய பரம தர்மத்துக்குகே ஒர் இருக்கணாகக் கூடிய நிலைமை இம்மாகாணத்தில் மாத்திரமே காணப்படுவதினின்றும் நன்கு விளங்குமு. ஆயினும் இதுபற்றி சுதேசாபிமானிகள் அதிகமாகப் பயப்பட வேண்டியதில்லை. ஏன்ெறால், முதலாவது உலக முழுவதிலும் புதிதாகத்தோன்றி, சென்ற சில வருஷங்களாகப் புயற்காற்றைப் போல் தொழில் செய்து வரும் தெய்வீகமான விடுதலைக் கிளர்ச்சியின் சக்தியால் இந்தியாவின் மக்கள் முப்பது கோடிப்பேரும் எங்களுகுகு ஸ்வராஜ்யம் வேண்டியதில்லையென்று ஹடம் பண்ணிய போதிலும் இந்தியாவுக்குக்கட்டாயமாக ஸ்வராஜ்யம் வந்து தீரவே செய்யும். மனிதர் எண்ணத்தை மீறியும் கால சக்தி வேலை செய்வதுண்டு அப்படிப்பட்ட காலம் இப்போது உலகமெங்கும் தோன்றியிருக்கிறது. மேலும் இந்த சமயத்தில் இந்தியாவிலும் ஜனங்களிற் பெரும் பகுதி ஸ்வராஜ்ய தாக்கத்தில் ஈடுபட்டுத்தான் கிடக்கறிார்கள். எனவே எந்த வகையாய் யோசித்த போதிலும், இந்தச் சென்னை மாகாணத்து ஜாதி

143