பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுப்படையாகச் சொல்லுகிறேன். எவ்விதமான வலிமைக்கும் கூட்டம் ஆதாரம் சபை சேர்ந்து பேசினால் மாத்திரம் போதாது. எப்போதுமே எங்கும் தமிழில் ஒவ்வொருவரும் நாம் இன்ன பெருங்கூட்டத்தைச் சேர்ந்திருக்கிறோம் என்பதையும் நமது வாழ்க்கையின் நோக்கம் இன்னவென்பதையும் மறவாதிருக்க வழி தேட வேண்டும்.

இங்கிலாந்து பிரான்ஸ் முதலிய ஐரோப்பிய தேசங்களில் கோடானு கோடி மனிதரைத் திரட்டிச் சடைபண்க்கு உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு தேசம் முழுவதும் ஒரு சைன்யம் போல ஆகும்படி செய்ய வேண்டும் என்று அங்குள்ள சில தலைவர்கள் நினைக்கிறார்கள். நான் சண்டைக்காரன் இல்லை. சமாதானக்காரன் இருபது கோடி ஹிந்துக்களையும், ஒரே கூட்டமாகச் செய்து, சண்டைக்கன்று மைதானமாக மனிதம் ஸாதன செய்யக்கூடிய நல்ல பயன்களை நிறைவேற்றும் பொருட்டாக உயோகப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மற்ற ஹிந்துக்களின் உதவி வேண்டும் தெய்வ பலம் வேண்டும். இவ்விரண்டும் கை கூடும்.

இருபது கோடி ஹிந்துக்களையும் ஒரே குடும்பம் போல செய்துவிட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. இந்த ஆசையினாலே ஒருவன் கைக் கொள்ளப்பட்டால் அவன் ராஜாங்கம் முதலிய சகல காரியங்களைக் காட்டிலும் இதனை மேலாகக் கருதுவான் என்பது என்னுடைய நம்பிக்கை.

எல்லா தர்மங்களைக் காட்டிலும் வேதத்தை நிலை நிறுத்தும் தர்மம் சிறந்ததென்று நான்கினைக்கிறேன். ஹிந்துக் களைத்திரட்டி ஒற்றைக் கருவியாகச் செய்துவிட வேணடும். இதற்குரிய உபாயங்களைக் சரியான காலத்தில் தெரிவிக்கிறேன்.

வருங்காலம்

உலகம் எவ்வளவு தீவிரமாக மாறிக் கொண்டு வருகின்றதென்பதைத் தமிழ் நாட்டவர் ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் சிற்சில விவகாரங்களில் மனத்தைப் பதிய வைத்துக் கொண்டுபு வெளியுலகத்தின் மாறுதல்களிலே புத்தி செலுத்தாமல் அற்ப விஷயங்களிலும் அற்பச் செய்கைகளிலும் நாளெல்லாம் கழிய விட்டுக் கிணற்றுத் தவளைகளைப் போல வாழ்வதில் பயனில்லை. *

வர்த்தகஞ் செய்வோர் கோடிக்சகணக்கான பணப்புழககம் ஏற்படும் படி பெரிய வர்த்தகங்கள் செய்ய வழி தேடவேண்டும். படிப்பவர் அபாரமான சாஸ்திரங்களையும் பல தேசத்துக் கல்விகளையும் கற்றுத்தர வேண்டும். ராஜ்ய விவகாரங்களில் புத்தி செலுத்துவோர் உலக சரித்திரத்தை நன்றாகத் தெரிந்து கொண்டு மற்ற ராஜ தந்திரிகளும் மந்திரிகளும் கண்டு வியக்கும்படியான பெரிய பெரிய யோசனைகள் செய்து நிறைவேற்றிப் புகழ்

150