பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பயனைக் காவியங்கள் இயற்றுவதிலும் படிப்பதிலும் மாத்திரமே செலவிடும் வழக்கம் மாறிப்போய் அவரவர்தத்தம்க்குரிய தொழில்களிலும் கல்வியறிவை பயன்படுத்தத் தொடங்குவார்கள். இதினின்றும் இதுவரை உலகத்தில் கைத் தொழிலாளர்கள் பரம ஏழைகளாக இருந்து வரும் நிலைமை நீங்கி மேன்மேலும், கைத் தொழிலாளருக்குள்ளே செல்வம் வளர்ச்சி பெற்றுவர ஏதுவுண்டாகும்.

இப்போது நமது நாட்டில் அங்கங்கே பல தொழிற்சங்கங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு வருகின்றன. இச்சங்கத்தார்கள் சம்பள ஏற்றத்துக்கும் வேலை நேரத்தைக் குறைப்பதற்கும் வேண்டிய எத்தனங்கள் பல செய்து கொண்டுவருகிறார்கள். இந்தப் பிரயத் தனங்களெல்லாம் முற்றிலும் நியாயமே இதில் ஐயமில்லை.

ஆனால், இச்சங்கத்தார்கள் மேற்கூறிய வழிகளிலே முயற்சி செய்வதுடன் தமது காரியங்களை நிறுத்தி விடாமல் அங்கங்கே பள்ளிக் கூடங்கள் ஆயிரக் கணக்காக ஏற்படுத்தி அவற்றில் நம்முடைய மக்களுக்கு நிறைந்த கல்வியூட்டுவதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும். மேலும், பகற்பள்ளிக் கூடங்கள் மாத்திர மேயன்றி இராப்பள்ளிக்கூடங்களும் ஏற்படுத்தி பிராயத்தினரும் சென்று படிப்பதற்குரிய காரியங்களை நடத்த வேண்டும்.

அறிவே வலிமை, கல்வியே செல்வத்தின் தாய், ஸரஸ்வதியும் லகதிமியும் மாமியும் மருமகளும் போல்வர் என்னும் கல்வியுள்ள இடத்தில் செல்வமும் செல்வமுள்ள இடத்தில் கல்வியும் ஏற்படுதல் மிகவும் அரிது என்றும் நமது நீட் டில் பரம மூடத்தனமான கொள்கையொன்று பரவிநிற்கிறது.

வெறுமே வர்ணனைகளும் கற்பனைகளும் சமைத்து யாருக்கும் எளிதில் புலப்படாத வலிய நடையில் காவியங்கள் எழுதுவதிலே படித்த படிப்பை யெல்லாம் செலவிடுவோருக்கு அதிகச் செல்வம் சேரமார்க்கமில்லை என்பது.ப்ரத்யrம் இந்த அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டே மேற்படி கொள்கை ஆதிகாலத்தில் உற்பத்தியாயிற்று. ஆனால், அது இக்காலத்துக்குப் பொருந்தாது. காவியங்களைக்கூட எளிய நடையில் எழுதினால் அச்சுத் தொழிலும் பொது ஜனக்கல்வியும் பரவிவரும் இக்காலத்தில் ஆசிரியர்களுக்கும் ஏராளமானலாபம் கிடைக்கும். காவியங்கள் எழுது வதற்கு மாத்திரம் படிக்காமல் பலவகை வியாபாரங்களுக்கும் தொழில்களுக்கும் வேண்டிய படிப்புகள் படித்து அவற்றை ஊக்கத்துடன் கையாளுவோருக்கு மேன் மேலும் செல்வம் பெருகும் ஆதலால் தொழிலாளிகளே கல்விப் பயிற்சி செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் மக்களுக்கும் கல்வியறிவு மிகுவதற்குள்ள வழி செய்யுங்கள்.

தொழிலாளருக்கு சில வார்த்தைகள்.

187