இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'நெல்லையூர் சென்று அவ்வூனர் கலைத்திறன்
கலைத்திறன்
‘நேரு மாறெனை எந்தை பணித்தனன்
புல்லையுண்கென வாளரிச் சேயினைப் போக்கல் போலவும், ஊன் விலை வாணிகம்,
நல்லதொரு பார்ப்பனப்பிள்ளையை
நாடுவிப்பது போலவும் எந்தைதான்
அல்லல் மிக்க தோர் மண்படு கல்வி யை
ஆரியர்க்கிங் கருவருப்பாவதை
- நரியுயிர்ச்சிறு சேவகர், தாதர்கள்
நாயெனத்திரியொற்றர், உணவினைப்
பெரிதெனக் கொடு தம்முயிர் விற்றிடும்
பேபியர் பிறர்க்கிச்சகம் பேசுவார்.
கலை பயில கென என்னை விடுத்தனன்
அருமைமிக்க மயிலைப் பிரிந்து மிவ்
அற்பர் கல்வியில் நெஞ்சு பொருந்துமோ?
- கணிதம் பன்னிரண்டு ஆண்டு பயில்வர் பின்
கார்கொள்வானிலோர் மீனிலை
அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கியார்
வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்
வாழும் நாட்டில் பொருள் கெடல்
கேட்டிலார்
துணியும் ஆயிரம் சாத்திர நாமங்கள்
o 23