பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(யுனைட்டட் ஸ்டேட்ஸ்) தேசத்து கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால் அது வசன நடைபோலே தானிருக்கும். எதுகை மோனை தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனையில்லாத கவிதை தான் உலகத்திலே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால், தளையும் சந்தமும் இல்லாத கவிதை வாழக்கமில்லை. வால்ட்லிட் மான், ‘கவிதையை பொருளில் காட்ட வேண்டுமேயல்லது சொல்லடுக்கில் காட்டுவது பிரயோஜனமில்லை என்றுகருதி ஆழ்ந்த ஒசை மாத்திர்ம உடையதாய் மற்றப்படி வசனமாகவே எழுதிவிட்டார். இவரை ஐரோப்பியர், காளிதாஸன். கம்பன், ஷேக்ஸ்பியர், மில்டன், தாந்தே, கெத்தே முதலிய மகாகவிகளுக்கு வலமான பதிவியுடையவராக மதிக்கிறார்கள்.

குடியாட்சி, ஜனாதிகாரம் என்ற கொள்கைக்குமந்திரரிவுகளில் ஒருவராக இந்த வால்லிட்மனை ஐரோப்பிய ஜாதியார் நினைக்கிறார்கள்.

எல்லாமனிதர்களும் ஆனும், பெண்ணும் குழந்தைகளும் எல்லாரும் ஸ்மானம் என்ற சத்தியத்தை பறையடித்த மஹான்களில் இவர் தலைமையானவர்.

ஸ்ர்வஜகத்தும் ஒரே சக்தியை உயிராக உடையது. ஆதலால் எல்லாம் ஒன்று. ஆதலால் பயத்தை விடு, பிறருக்குத் தீங்கு செய்யாதே, மற்றப்படி யெல்லாம் உன் சொந்த இஷ்டப்படி நடந்து கொள். எல்லாரும் ஸ்மானம் யாருக்கும் பயப்படாதே. கடவுள் ஒருவருக்கே பயப்பட வேண்டும் மனிதர் கடவுளைத் தவிர வேறொன்னுக்கும் பயப்படக் கூடாது. இது தான் அவருடைய மதத்தின் மக்கியமான கொள்கை. “எல்லாரும் பரஸ்பரம் அன்பு செய்யுங்கள். என்ற கிறிஸ்துவின் போதனையை அவர் கவிதையாகப் பலவகைகளில் சொல்லியிருக்கிறார். இந்த மஹான் ஒரு நகரம் கற்பனை பண்ணுகிறார். அந்த நகரத்தில் ஆணும் பெண்ணும் சபதத்தில் தஞ்சார். அங்கே அடிமையில்லை. ஆண்டையுமில்லை. அங்கே, ஸ்தானிகர்களின் முடிவற்ற செருக்கைப் பொது ஜனம் உடனே சினந்து எதிர்க்கிறது. அங்கே நகரத்தான் தலை. நகரத்தான் பிரமாணம் அவனைடைய சம்பளக்காரரே பிரஸிடெண்டு, மேயர், கவர்னர், எல்லாரும். அங்கே குழந்தைகள் தமக்குத் தாமே பதிவுசெய்து கொள்ளவும் தம்மைத்தாமேகாத்துக் கொள்ளவும் பயிற்சி பெறுகிறார்கள். அங்கே பெண்கள் வீதிகளில் ஆண்களைப் போலவே கூட்டம் கூடி ஊர்வலம் வருகிறார்கள் அங்கே பொதுக்கட்டிடங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான இடம்பெறுகிறார்கள்.

இவ்வாறு வால்ட்லிட்மன் கற்பனை பண்ணின நகரத்தைக் கண்முன்னே பார்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்போது கூடப் பல ராஜ்ய தந்திரிகளும் மந்திரிகளும் சாஸ்திரிகளும் முயற்சி செய்து கொண்டு வருகிறார்கள்.

“பணக்காரன், ஏழை, உத்தியோகஸ்தன், கூலிக்காரன், குடிபடை, ஆண், பெண், மூத்தது இளையது எல்லாரும் ஒருவருக்கொருவர் வஞ்சனை

244