பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞானிகளென்றும் யோகிகள் என்னும் சொல்லப்படுவோர் இந்த சக்தியை மனமறிந்து சில முறைகளை அனுஷ்டித்து பெறுகிறார்கள் ஸ்ாமன்யஜனங்கள் விஷயம் தெரியாமல் இயற்கை முறையிலே சிறிது பெற்றவர்களாகின்றனர். சக்தி சிறிதும் இல்லாவிட்டால் ஒருவன்கrணநேரம் கூட மூச்சுவிட்டுக் கொண்டு இவ்வுலகத்தில் இருக்க முடியாது. வெளிக் காற்றிலே உலவி அத்துடன் யோகப் படுவதால் சித்தி உண்டாகிறது. சரீரத்தை உழைப்புக் கு உட்படுத்தவதால் இடைவெளியெங்கும் ததும்பிக்கிடக்கும். அறிவைப்பல விஷயங்களில்ஏ சிரத்தையுடன் செலுத்த உழைப்பதனால் சக்தி உண்டாகிறது. இங்ஙனம் சிறிது சிறிது ஏற்படும் சக்தியினாலேதான் உலகத்தில் மனிதர்கள் ஜீவித்திருக்கிறார்கள்.

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டும் மென்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்பொருட்டாகவே நாம் உயிர் தரிக்கின்றோம். ‘மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தியதிகரிக்கும்படி செய்க. அக்காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய சக்தியை எனக்கருள்புரிக’ என்று நம்மில் ஒவ்வொருவனும் தியானம் புரித்ல் வேண்டும். ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை மற்போர்முதலியவற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம், தவம், பிரம்மசரியம், சுத்தம் முதலியவற்றால் ஒர் ஜாதிக்கு சக்தி அதிகப்படுகிறது. மனம் வர்க்கும் செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் புறமும் மாசு இல்லாது செய்யப்பழகவேண்டும். பயம் சந்தேகம் சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தி யேற்படும்.

“புராதன சம்பிரதாய மென்பதால் மட்டுமே ஒன்று பொய்யாகி விட மாட்டாது. புதி தென்பதால் மாதிரமே ஒன்றை மெய்யாகக் கொண்டுவிடுதலும் பிழை. ஆராய்ந்து அனுபவத்தால் பார்க்குமிடத்தேதான் ஒரு விஷயத்தின் மெய்ம்மையும் பொய்ம்மையும் விளங்கும். நமது முன்னோர்கள் “யோகம்’ என்ற தோர் மார்க்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இஃது ஹடயோகம் ராஜயோகம், பக்தியோகம், ஞான யோகம் என நான்கு வகைப்படும். இவற்றி ஹடயோகந்தான் மிக்க் குறைந்த பயன்தரக்கூடியது. மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம். விஷயம் தெரியுமுன்பாகவே “இதில் பயனென்ன விளையப்போகிறது’ என்று சந்தேகப்படுதல் தெளிந்தோர் செய்யும் காரியமன்று; அவற்றை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும். அங்ஙனம் சாதனை செய்தவர்களுக்கு பலவித அபூர்வ சக்திகளுண்டாயிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம். நமக்கு ஏன் இந்த சக்திகள் ஏற்படக்கூடாது? இந்த மூடத்தமோ குணத்தால் என்ன சுகங்கள் கண்டு விட்டோம்? சோம்பராலும் அற்ப விஷயங்களிலே ஆசை கொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட துரும்பு போலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்று விட்டோம்?

‘துணிவு, உள்ளத்தூய்மை, ஏதாவதொரு மகத்தான லட்சியத்திலே

246