இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பார் ..
‘F’s ண், ார்.
- . i ன் என்றொரு மானிடம் வாழ்ந்தது
காளிதாசன் கவிதை புனைந்ததும்
உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்
ஒர்ந்தளந்ததோர் பாஸ்கரன்
மாட்சியும் ==
நம்பருந்திறலொடு பாணினி
ஞாலபிதில் இலக்கனங்கண்டது
இம்பர் வாழ்வின் இறுதி கண்டு உண்மையின்
இயல்புணர்த்திய சங்கரன் ஏற்றமும்.
- சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பாரளித்துத் தர்மம் வளர்த்ததும்
பேரருட்சுடர் வாள் கொண்டசோகனார் o
பிழைபடாது புவித்தலங்கரித்ததும்
வீரர் வாழ்த்த மிலேச்சர்தம் தீய கோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்.
- அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம் பயில் பள்ளியும் போகுனர்
முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
24