இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நமக்குக் காட்சி தென்படுகிறது.
‘விதியோர் கணவரே
அம்மி மிதித்தே அருந்ததியைக் காட்டி
யெனை
வேகச் சுடர்த் தீ முன்வேண்டி
மணஞ் செய்து
பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண் விரோ.
‘’ என்றாள், விஜயனுடன் ஏறுதிறல்
வீமனுமே
குன்றாமணித் தோள் குறிப்புடனே
நோக்கினாள்.
‘தருமனும் மற்றங்கே தலை குனிந்
நின்றிட்டான்.
பொருமியவள் பின்னும் பலம்புவாள்
- வான்சபையில்
கேள்வி பலவுடையோர்,
கேடிலாநல்லிசையோர்
‘வேள்வித் தவங்கள் மிகப்புரிந்த
வேதியர்கள்
மேலோர் இருக்கின்றீர்
வெஞ்சினமேன் கொள்கிரரோ
- வேலோரெனையுடைய வேந்தர்
பிணிப்புண்டார்
இங்கிவர் மேல் குற்றம் இயம்ப
38