இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காத்துடையாய்
அச்சரப் பொருளாவாய்-கண்ணா!
அக்கார அழுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய். கண்ணா!
தொண்டர் கண்ணிர்கை ளத்
துடைத்திடுவாய்.
தக்கவர்தமைக்காப்பாய்-அந்தச்
சதுர்முக வேதனைன் படைத்துவிட்டாய்
- வானத்து வானாவாய்-தீ
மண், நீர், காற்றினில் அன்வயாவாய்
போனத்துள் வீழ்ந்திருப்பார். தவ
முனிவர்தம் அகத்தினில் ஒளிர்தருவாய்
கானத்துப் பொய்கையிலே-தனிக்
கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்
தானது ஸ்ரீதேவி- அவள்
தாளினைகைக் கொண்டு மகிழ்ந்திருப்பாய்
- ஆதியிலாதியப்பா கண்ணா
அறிவினைக் கடந்த விண்
அகப் பொருளே!
சோதிக்கும் சோழியப்பா-என்றன்
சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய்
மாதிக்கு வெளியினிலே-நடு
வானத்திற் பறந்திடம் கருடன் மீசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்-கண்ணா
சுடர்பொருளே பேரடற் பொருளே!
49