இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பொய்யர் தம் துயரினைப் போல்- நல்ல
புண்ணிய வாளர்தம் புகழினைப் போல்
தையலர் கருணையைப் போல்- கடல்
சலசலத்தெறிந்திடும் அலைகளைப் போல்,
- பெண்னொளி வாழ்த்திடுவார். அந்தப்
பெருமக்கள் செல்வத்திற்
பெருகுதல் போல்
கண்ணபிரான் அருளால் - தம்பி
கழற்றிடக் கழற்றிடத் துணி புதிதாய்
வண்ணப் பொற் சேலைகளாம்- அவை வளர்ந்தன. வளர்ந்தன, வளர்ந்தனவே!
எண்ணத்திலடங்காவே- அவை
எத்தனை எத்தனை நிறத்தனவோ!
- பொன்னிழை பட்டிழையும் - பல
புதுப்புது புதுப்புது புதுமைகளாய்ச்
சென்னியிற்கை குவித்தாள். அவள்
செவ்விய மேனியைச் சார்ந்து நின்றே
முன்னிய ஹரி நாமம்- தன்னில்
மூளுநற் பயன் உலகறிந்திடவே
துன்னிய துகிற்கூட்டம்- கண்டு
தொழும்பத்துச்சாதனன் வீழ்ந்து விட்டான்
- தேவர்கள் பூச்சொரிந்தார். ஒம் ஜெய ஜெய பாரத சக்தி என்றே
ஆவலோடு எழுந்து நின்று-முன்னே
5 |