ஆபிய விட் ,பன் ைதெ புதான்
சாவடி மறவரெல்ாம். ஒம்
சக்தி சக்தி என்று கரங் குவித்ார் காவலின் நெற்பிழைத்தான்-கொடி
கடியரவுடையவன்தலை கவிந்தான்
என்று மகாகவி பாரதி அனைவரும் வியக்கத்தக்க வகையில், அனைவருக்கும் வியப்பூட்டும் வரையில் பாடி முடிக்கிறார்.
துகிலுறிதல் கொடுமையின் நிகழ்வு முடிந்த போது, வீமனும், பார்த்தனும், பாஞ்சாலியும், சபதமேற்றனர். போர்க்களத்தில் போரின் முடிவில் சபதங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
குயில்பாட்டு
மகாகவியின் குயில்பாட்டு புகழ் பெற்ற பாடல் தொகுதியாகும்.
இந்த குயில் பாட்டில் தான் மகாகவி பாரதியின் புகழ் பெற்ற
‘'காதல், காதல், காதல்
காதல் போயிற் காதல் போயிற்
காதல் காதல் காதல்’ என்று அற்புதவரிகள் வருகின்றன.
பாரதியார் கட்டுரைகள்
மகாகவி பாரதியாரை மகாகவியென்றும் தேசிய மகாகவி என்றும் தான் அதிகமாக உலகரியும். அவருடைய தேசிய கவிதைகள் கருத்துமிக்கன. கருத்தாழம் மிக்கன. துடிப்பு மிக்கன. மக்களுடைய தேச பக்த உணர்வைத் தட்டி எழுப்புவன.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே’
என்று கூறும் சொற்களிலேதான் எத்தனை அர்த்தமும் பொருளும் ஆழுந்த
கருத்துக்களும், கருத்தாழமும் நிறைந்திருக்கின்றன. இத்தகைய கருத்தாழமும் சிறப்புச் செய்திகளும் மிக்க கவிதைச் சொற்களும் அவருடைய
52