பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்காளத்து பிராமண குலத்தில் பிறந்து ஐதராபாத் நாயுடு ஒருவரை மணம் புரிந்து வாழும் ஸ்ரீமத் சரோஜினி நாயுடு என்ற ஸ்திரி, இங்கிலிஷ் பாஷையில் உயர்ந்த தேர்ச்சி கொண்டு ஆங்கிலேய அறிஞர்கள் மிகவும் புகழ்ந்து போற்றும்படியாக இங்கிலிஷ் கவிதை எழுதுகிறார். இவருடைய காவியங்கள் பல இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு அங்குள்ளோரால் மிகவும் உயர்வாகப் பாராட்டப்படுகின்றன. மேலும் இந்த ஸ்திரி இங்கிலாந்தில் பல இடங்களிலே நமது தேசத்தின் முன்னோற்றத்தையொட்டி அற்புதமான பிரசங்கள் செய்து சிறந்த கீர்த்தி படைத்திருக்கிறார்.

இங்ஙனம் தமிழ் மாதர்களிலும் பலர் மேல்நாடுகளுக்குச் சென்று புகழ் பெற்று மீள்வாராயின் அத்னின்றும் இங்கே நம்முடைய ஸ்திரிகளுக்குள்ள மதிப்பு மிகுதிப்படும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை. எவ்வாறு நோக்கிய போதிலும் தமிழ்நாட்டு மாதர் சம்பூர்ணமான விடுதலை வேண்டு வாராயின் அதற்குக் கல்வித் தோனியே கொஞ்சம் பொருந்துணையாம். எனவே கொஞ்சம் கொஞ்சம் பல துறைகளில் பயிற்சி வாய்ந்திருக்கும் தமிழ்ச் சோழர்கள் இரவு. பகலாகப் பாடுபட்டு அவ்வத்துறைகளில் நிகரற்ற தேர்ச்சி பெற முயல வேண்டும். இடைவிடாத பழக்கத்தால் தமிழ் மாதர் தமக்குள்ள இயற்கையறிவை மிகவும் உன்னத நிலைக்குக் கொணர்ந்து விடுதல் சாலவும் எளிதாம்.

ஒளவையார் பிறந்து வாழ்ந்த தமிழ் நாட்டு மாதருக்கு அறிவுப் பயிற்சி கஷ்டமாகுமுா? சற்றே ஊன்றிப்பாடுபடுவார்களாயின் தமிழ் மாதர் அறிவுப் பயிற்சிகளிலே நிகரற்ற சக்தி படைத்து விடுவார்கள். அறிவுத்திறத்தால் பிறகு விடுதலைக் கோட்டையைக் கைப்பற்றுதல் அதிசுலபமாய் விடும். எனவே பலவித சாஸ்திரங்கள் படித்து தேறுங்கள். தமிழ் சகோதரர்களே! அங்ஙனம் தேறியவர்களில் சிலரேனும் வெளிநாடுகளுக்குப் போய்க் கீர்த்திலம் பாதித்துக் கொண்டு வாருங்கள். விடுதலைத் தெய்வம் உங்களைத் தழுவும் பொருட்டு இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு காத்து நிற்கிறது. தமிழ் மாதர்களே மனம் சோர்ந்து விடாதீர்கள். உங்களுக்கு நல்ல காலம் வருகிறது. வந்து விட்டது. நீங்கள் விடுதலை பெறுவீர்கள். உங்களால் உலகம் மேன்மையுறும்.

சகோதரிகளே!

தமிழ்நாட்டின் நாகரிகம் மிகவும் புராதனமானது ஒரு தேசத்தின் நாகரிகம் அல்லது அறிவு முதிர்ச்சி இன்னதன்மையுடையதென்று கண்டுபிடிக்க வேண்டுமாயின், அதைக் கண்ணாடி போல் விளக்கிக் காட்டுவது அந்த நாட்டில் வழங்கும் பாஷையிலுள்ள இலக்கியம் அல்லது காவியம் முதலிய நூல்களேயாகும். இங்கிலாந்து தேசத்தின் தற்கால இலக்கிய நூல்களை வாசித்துப் பார்த்தோமாயின் அதன் தற்கால நாகரிகத்தை ஒருவாறு அளவிடக்கூடும். எனனே தமிழ்நாட்டின் புராதன நாகரிகத்தை

67