பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்கள் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த முதல் ஒளவையார் இயற்றப்பட்டன. அல்ல வென்றும் சுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன்னேயிருந்த இரண்டாம் ஒளவையால் செய்யப்பட்டன என்றும் ஒரு

கட்சியார் சொல்லுகிறார்கள்.

ஒளவையார் வெறுமே நூலாசிரியர் மட்டுமல்லர். அவர் காலத்திலேயே அவர் ராஜ நீதியில் மிகவுளம் வல்லவரென்று தமிழ் நாட்டு மன்னர்களால் நன்கு மதிக்கப் பெற்று ராஜாங்க துரில் நியமனம் பெற்றிருக்கிறார். மேலும் அவர் சிறந்த ஆத்மஞானி யோக சித்தியால் உடம்மை, முதுமை, நோவு, சாவுகளுக்கிசையாகாமல் நெடுங்காலம் காப்பாற்றி வந்தார்.

‘மதாசற்ற கொள்கை மனத்து

அமைந்தக்கால்

ஈசனைக்காட்டு முடம்பு’

அதாவது இருதயத்தில் சுத்தமான பயமற்ற, கபடமற்ற, குற்றமற்ற, பகைமையற்ற எண்ணங்களை நிறுத்திக் கொண்டால் உடம்பின் தெய்வத்தன்மை. அதாவது சாகாத்தன்மை (அமரத்தன்மை) விளங்கும் என்றும் பொருள்படுவது இந்தக் குறள் பாடியவர் ஒளவையார். இவர் தாமே நெடுந்துாரம் இக்கொள்கைப்படி ஒடுகியரென்பது இவருடைய சரித்திரத்தில் விளங்குகிறது.

ஒரு தேசத்தின் நாகரிகத்துக்கு அந்த தேசத்தின் இலக்கியமே மேலான அடையாளமென்று முந்திய வியாசத்தில் சொன்னேன். திருஷ்டாந்தமாக ஆங்கிலேய நாகரிகத்திற்கு ஷேக்ஷ்பியர் முதலிய மகாகவிகளின் நூல்களே அளவுக்கருவியாகக் கருதப்படுகின்றன. ‘நாங்கள் இந்தியா தேசத்து ராஜ்யாதி காரத்தை இழக்க ஒருப்பட்டாலும் ஒருப்படுமோ மேலன்றி ஷேக்ஸ்பியரை இழக்க ஒரு நாளும் ஒரு பட மாட்டோம்’ என்று நாம் மறுமொழி சொல்வோமென்று ‘மெக்காலே என்றும் ஆங்கிலேய ஆசிரியர் சொல்லுகிறார்.

இந்த மாதிரியாகப் பெருமைப்படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம். திருவள்ளுவரைச் சொல்லலாம். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம். இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும் கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும்புலவராலேயே தம்மனைவரிலும் மிகச் சிறந்தவராகக் கருதப்பட ஒளவைப்பிராட்டியையே மிகவும் விசேஷமாக எடுத்துச் செல்லக்கூடும். தமிழ்நாட்டின் மற்றச் செல்ங்களையெல்லாம் இழந்து விடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும்

கேட்பார்களாயின், ‘மற்றச் செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்

கொள்ளவல்லது, ஒளவைப்பிராட்டியின் நூல்களை இழக்க ஒரு போதும்

72