பக்கம்:மகாகவி பாரதியின் பட்டொளி வீசும் படைப்புகளும்-பொருத்தமும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமது அமர இன்பத்தைத் தரும் பொருட்டு. இன்று தேவர்களை அழைக்கிறோம். காற்றேவா! இங்கேயே இரு, எப்போதும் திரும்பியே போகாதே. நீ உயிர். உன்னை வரிக்கிறோம். அசுவினி தேவர்கள் உயிர்ப்பரிகளிலே ஏறி வருகின்றனர். அவர் நோய்களைத் தீர்ப்பர் அவயை எம்முள்ளே பதியும்படி செய்கின்றோம் என்று எழுதுகிறார்.

பாரதியார் பாரதத்தின் ஒரு மகாகவி ரிஷிகளுடனும், சித்தர்களுடனும், மகாஞானிகளுடனும் தொடர்புடையவர். தேவர்களை, நமது அறிவை நமது அன்பை, இன்பத்தை அழைக்கிறார். மருத்துக்களை அழைத்துப் பேசுகிறார். இது மகாகவி பாரதியின் தனி பாணியாகும்.

  • மகாகவி பாரதியார் தமிழருக்கு என்று தலைப்பிட்டு ஒரு மிகச் சிறந்த கட்டுரையை எழுதுகிறார். அக்கட்டுரை தமிழ் மக்களை மட்டுமல்ல பாரத புத்திரர் அனைவரையும் உணர்ச்சியூட்டித் தட்டி எழுப்புவதாகும்.

தமிழருக்கு

தமிழா தெய்வத்தை நம்பு பயப்படாதே உனக்கு நல்ல காலம் வருகின்றது.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர் பிறந்திருக்கிறார்கள். தெய்வங்கண்ட

கவிகள், அற்புதமான சங்கீத வித்வான்கள், கைதேர்ந்த சிற்பர். பல நூல் வல்லார் பல தொழில் வல்லார், பல மணிகள் தோன்றுகிறார்கள். அச்சமில்லாத தர்மிஷ்டர் பெருகுகின்றனர். உனது ஜாதியிலே தேவர்கள் மனிதராக அவதரித்திருக்கிறார்கள். கண்ணை நன்றாகத் துடைத்துவிட்டு நான்கு பக்கங்களிலும் பார், ஒரு நிலைக் கண்ணாடியிலே போய்ப் பார். நமது நாட்டு ஸ்திரிகளிலே பலர் சக்தி கணங்களின் அவதாரமாக ஜனித்திருக்கிறார். ஒளி சக்தி, வலிமை, வீர்யம், கவிதை, அழகு, மகிழ்ச்சி நலங்களெல்லாம் உன்னைச் சார்கின்றனர்.

தமிழா பயப்படாதே ஊர் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்.

ஜாதி வேற்றுமைகளை வளர்க்காதே ஜாதியிரண்டொழியே வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள்.

பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவிலை ‘வாழ்க்கைத்துணை’ என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆனும் பெண்ணும் சமம்.

வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு புராணங்களைக் கேட்டுப் பயன் அடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி, விதலங்குகள் போல் நடந்து கொள்ளதே!

81