இசைகின்றது போலும், மனிதன் உடம்பினாலே பறக்காவிட்டாலும் உள்ளத்தைத் திசை வெளியிலே பறக்கும்படி செய்கிறான். அப்போது இயற்கையிலேயே பாட்டுத் தோன்றுகிறது.
ரஸங்கம் ஒன்பது (நவரலங்கள்)
1. வீரம்
2. ரெளத்திரம் (கோபம்)
3. அத்புதம் (வியப்பு)
4. சாந்தம் (நடுவு நிலை)
5. பயாநகம் (அச்சம்)
6. பீபத்ளலம் (வெறுப்பு)
7. ஹாஸ்யம் (நகை)
8. கருணை, சோகம் (துயரம்)
இதை அவலம் என்பது பழைய தமிழ் வழக்கு.
9. சிருங்காரம் (காமம்)
வெளிப்பொருள்களைக் காணும் போது அல்லது நினைக்கும் போது மனிதனுடைய உள்ளத்திலே இந்த ஒன்பது சுவைகளிலே ஏதேனும் ஒன்று தோன்றும் இரண்டு மூன்று கலந்தும் தோன்றக்கூ;டும். ரஸ உணர்ச்சியிலே உள்ளத்தை முழுவதும் ஈடுபடுத்தக்கூடிய சிலர் கவிதை பாட்டு சித்திரம் முதலிய தெய்வக் கலைகளிலே சிறப்படைகிறார்கள். ரஸ உணர்ச்சி இல்லாவிடில் இக்கலைகள் நசித்துப் போகும்.
பிறர்துன்பத்தைக் காணும்போது தனது துன்பம் போல் எண்ணி வருந்தும் இயல்புடைய ஒருவனும் பிறர் துன்பத்தைக் கருதாத ஒருவனும் யாப்பிலக்கணம் படித்துக் கவிதை செய்யப்பழகு வாராயின், முந்தியவன் உண்மையான கவிதை எழுதுவான். பிந்தியவன் பதங்களைப் பின்னுவான். இவனுடைய தொழிலிலே கவிதை இராது. இப்படியோ தான் ஒவ்வொன்றிலும்,
ரஸ்ஞானமில்லாதபடி பல்லவிகளும் கீர்த்தனங்களும் பாடுவோர் ஸங்கீததின் உயிரை நீக்கிவிட்டு வெற்றுடலைக் (அதாவது பிணத்தைக்) காட்டுகிறாரகள். இக்காலத்து சங்கீத வித்வான்களிலே பலர் ஸங்கீதத்திற்கு நவரசங்களே உயிர் என்பதை அறியாதவர்.
முத்துசாமி கீrதர், தியாகையர், பட்டணம் சுப்ரமணிய அய்யர் முதலியவர்களின் கீர்த்தனங்களிலே சிலவற்றை அதிக ஸங்கதிகளுடன்
93