பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 தாயுள்ளத்தை அவரது இரண்டு மெய்க்காத்; களே 16 குண்டுகளால் துளைத்தெடுத்து இ ன்! வெள்ளத்தில் வீழ்த்தி விட்டனர். 1. ப்தி எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகத்திற்கு அன்னை இந்திரா இரையாகி விட்டார் என்பதை எண்ணும் போது விழிகள் குளமாகின்றன.

  • இந்தியாவின் இதயஜோதியாக விளங்கிய தன் அருமை தாய் மறைந்த சோகத்தை விழுங்கிக் கொண்டு அந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் ராஜீவ்காந்தி, ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர் மேற்கொண்ட தொண்டும் அரசியல் நடவடிக்கை களும்; நாட்டில் எழுந்த வன்முறைகளைத் திறம் பட அவர் அடக்கிய தீரமும்; அவரது நிர்வாகத் திறமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தன.

சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன் பொழுகப் பேசும் குழந்தை உள்ளம் படைத்த ராஜீவ்காந்தி சதிகாரியின், குண்டுக்கு தமிழ் மண் னில் பலியாகி விட்டார். வள்ளுவப் பெருந்தகை அவர்கள் கூடா நட்பு என்னும் அதிகாரத்தில் பின்வருமாறு எழுதி யுள்ளார்: "தொழுத கையுள்ளும் படை யொடுங்கும், ஒன்னார்; அழுத கண்ணிரும் அனைத்து'.