பக்கம்:மகான் குரு நானக்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

மகான் குருநானக்


என்ன புகார்களை அநத ஏழை விவசாயி ஊர்த் தலைவரிடம் கூறி அழுதானோ, அதற்கு நேர் மாறாக மாடுகள் பயிர்களை மிதித்துத் துவைத்ததற்கான அடையாளங்களோ பயிர்களை மாடுகள் மேய்ந்ததற்கான அரைகுறை கதிர் தாள்களோ, மொத்தத்தில் மாடுகள் வயல்களில் இறங்கியதற்கான சுவடுகளோ ஏதும் அவர்கள் கண்களுக்குப் புலப்படவில்லை.

ஏழை விவசாயி அழுதான் என்ன சொல்வது என்று திணறினான்! தலைவரிடம் தந்த புகார் பொய்யாய் போய் விட்டதே. எப்படி என்று திகைத்தான். உண்மையா பொய்யா வென்று நடந்ததைப் பார்க்க வந்த தலைவரது வேலையாட்கள், அந்தக் குடியானவனைக் கண்டபடி ஏசினார்கள் தலைவரிடம் சென்று, நானக் மீதும், மாடுகள் மீதும், அந்த வேளாளன் கூறியதெல்லாம் பொய்ப் புகார்கள் என்று கூறிவிட்டார்கள்.

ஆனால், உழவன் ஐயா எனது கண்களிரண்டாலும் பார்த்தது உண்மை, சத்தியம். மறுபடியும் பயிர்கள் எப்படியோ வளர்ந்துவிட்டன ஐயா என்று அழுது கொண்டே கூறினான் அவன். ஆனால் ஒன்று ஐயா, எனது வார்த்தைகளை இப்போது நீங்கள் நம்பமாட்டீர்கள். ஏனென்றால் ஏழை ஆனால் நானக் ஏதோ ஒர் அற்புதம் செய்து நாசமாக்கப்பட்ட எனது பயிர்களை மீண்டும் வளரச் செய்து விட்டார் போகப் போக எனது உண்மையை நீங்கள் உணர்வீர்கள் என்றான்

விவசாயி ஏழைதான். ஆனால், எக்காரணம் கொண்டும் பொய் பேசமாட்டான். நானக்கிடம் ஏதோ ஓர் கடவுள் சக்தி இருக்கிறது என்பது ஊர்த் தலைவரது நம்பிக்கை. அதற்குச் சான்றாக இருக்கிறது இந்த ஏழை விவசாயினுடைய புகார். எனவே எப்படியும் நானக்கின் கடவுள் சக்தி என்ன என்பதைக் கண்டு பிடித்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து அதற்கான நேரத்தை எதிர்பார்த்திருந்தார் தலைவர்.