பக்கம்:மகான் குரு நானக்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

31


சுல்தான் பூரில் அக்காள் கணவர் ஓர் அமைச்சராதலால், அவர் தனது மைத்துனர் நானக்குக்கு தானியக் களஞ்சியம் காப்பாளர் என்ற வேலையைக் கவர்னரிடம் பெற்றுத் தந்தார். அந்த வேலையைப் பெற்றுக் கொண்ட நானக் தனது மைத்துனர் பெயருக்கு இழுக்கேதும் நேரிடாதவாறு பொறுப்புடன் பணியாற்றி வநதாா.

தனது தம்பி, கணவர் பெற்றுக் கொடுத்த வேலையை ஒழுங்காகச் செய்து வருவதைக் கண்ட தமக்கையார், தம்பியைப் பற்றி இனி கவலைப்படவேண்டிய அவசியமில்லை. தம்பி திருந்தி விட்டான் என்று மகிழ்ச்சியடைந்தார்.

தம்பிக்கு நல்ல இடத்திலே பெண் பார்த்து திருமணம் செய்து விடலாம் என்ற முடிவுக்கு தமக்கை வந்தார். கணவரிடம் இது பற்றி கலந்துரையாடினார். தம்பியின் சம்மதத்தைப் பெற்றிட நானக்கிடமும் கூறினர். அக்காள் வார்த்தையை தம்பி மறுக்காமல் ஒப்புக் கொண்டார். இந்தச் செய்தியை தனது தந்தை மேதாகலூராய்க்கும் மகள் தெரிவித்தார்.

அமைச்சர் மைத்துனர் தானியக் களஞ்சியக் காப்பாளர் பதவியும் நிரந்தரமானது. அதனால் பீபி நானகி, தனது தம்பிக்கு பணக்காரர் வீட்டுப் பெண்ணாகப் பார்த்து பேச்சு வார்த்தையும் நடத்தி, பெண்வீட்டாரது சம்மதத்தையும் பெற்றார். பெண்ணின் பெயர் மட்டாசுலாகனி என்பதாகும். நல்ல குடும்பத்திலே பிறந்த அந்தப் பெண்ணுக்கும் நானக்குக்கும் திருமணம் நடந்தது. தாய் தந்தை, உறவினர் அனைவரும் ஆசி கூறி மணத்தை முடித்து வைத்தார்கள். தமக்கைக்கோ பேரின்பம்! உதவாக்கரை என்று தனது தந்தையால் வெறுக்கப்பட்டு வந்த தம்பியை அழைத்துக் கொண்டு வந்து, தனது கணவரின் ஆசியோடு நல்ல வேலையைப் பெற்றுத் தந்து, நல்ல குடும்பப் பெண்ணை, நற்குணவதியை, பணக்காரர் வீட்டுப் பெண்ணாக்ப் பார்த்து தனது தம்பிக்கு மனம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனாக்கி விட்டோமே என்ற மகிழ்ச்சியிலே தமக்கை பேரின்பம் கண்டார்.