பக்கம்:மகான் குரு நானக்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மகான் குருநானக்


வட திசை நோக்கி மர்தானா சென்றான். கொஞ்சம் தூரம்தான் போயிருப்பான் அப்போது அந்தக் கானகப் பாதை வழியாக ஒரு முதியவன் நடந்து வந்து கொண்டிருந்ததை மர்தானா பார்த்தான். அந்த முதுமையாளன் வயதுக்கேற்றவாறு சற்றுக் கூன் வடிவமாக அவனது முதுகு காணப்பட்டதைக் கண்டான் கிழவன் நரைத்த வெண்தாடியோடு வருவதைப் பார்த்தான் மர்தானா!

அப்போது அந்த முதியவன் மர்தானாவைப் பார்த்து, 'ஐயா எங்கே வந்தீர்கள்?' என்று கேட்டான்.

ஒருவர் எனக்காகக் காத்திருப்பார் அவரைப் பார்க்கச் சென்று கோண்டிருக்கிறேன் என்றான் மர்தானா!

'ஏன் அவரைத் தேடிப் போகிறாய்?' என்று கேட்டார் அந்த நரைதாடிக் கூன் கிழவன்.

வேறு ஒன்றுமில்லை, அவரிடமிருந்து 'ரூபாய்' என்ற ஓர் இசைக் கருவியைப் பெற்று வரச் செல்கிறேன் என்றான் மர்தானா ஓ, ஓ, அவர் நீர்தானா? நானக் உம்மை அவரிடம் அனுப்பி வைத்தாரா? என்று அந்தக் கிழவன் கேட்டான்.

'நானக் அனுப்பினாரா?' என்று கிழவர் கேட்டதைக் கேட்டு, மர்தானா திகைத்து வியப்படைந்து, ஆம் அவர்தான் அனுப்பினார் என்றான்.

உடனே அந்தக் கிழவன், மர்தானா, நானக் குரு மகானுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தைக் கூறு. பல நூற்றாண்டுகளுக்கு முன்னே என்னை நம்பி அவர் கொடுத்து விட்டுச் சென்ற இந்த ரூபாய் இசைக் கருவியை, இப்போது நான் உன்னிடம் கொடுத்திருப்பதையம் கூறு என்று சொல்லியவாறே ஓர் அழகிய ரூபாய் இசைக் கருவியை அந்த வயோதிகத் தாடிக்காரர் மர்தானாவிடம் கொடுத்தார். அடுத்த கணமே, அவர் மறைந்து போனார். இதையெல்லாம் கேட்டபடியே வியப்படைந்த அவன் இசைக் கருவியைப் பெற்றுக் கொண்டு வந்தான் - நானக்கிடம்!