பக்கம்:மகான் குரு நானக்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. குருநானக் செய்த அற்புதங்கள்

மயமலைச் சாரல்களின் ஒரு பகுதி காஷ்மீரம். அது இயற்கை அன்னையின் அழகுக் காட்சிகள் நிறைந்த ஓர் இடம்; எங்கு பார்த்தாலும் எழில் சிரிக்கும் வண்ண வண்ண வனப்புகள் மிகுந்த மலர்கள் காட்சி தரும் பகுதி. அழகு மிகு மலர்ச் செடிகள் அணிவகுத்து சிரிக்கும் இடம். வளைந்தாடும் கொடிகள் மக்களை வரவேற்று மகிழ்ச்சியூட்டும் நிலம்.

கனி குலுங்கும் மரங்கள். வெள்ளை வெளேர் என்ற காட்சி தந்து கொண்டே இருக்கும் பனிக் குவியல்கள். அந்தக் காஷ்மீரம் நாட்டின் தலைநகர் ஸ்ரீநகர். சத்குரு நானக்கும், அவரது மாணவர்களும் அந்த நகருக்குள் சென்றார்கள்.

குரு நானக் வருகை தருகிறார் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து, அவரது ஆசியையும், வாழ்த்தையும், அறிவுரைகளையும், அறவுரைகளையும் பெற்று ஞானத் திருவிழாவைப் போல வீதி வீதியாகச் சென்று கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீநகரில் பிரம்மதாஸ் என்ற ஒரு பண்டிதர் வாழ்ந்து வந்தார். அவரிடம் ஓர் அற்புதச் சக்தி கொண்ட பறக்கும் கம்பளம் ஒன்றிருந்தது. அவர் அந்தக் கம்பளத்தின் மேல் அமர்ந்து கொண்டு இமயமலைச் சாரல் மக்கள் இடையே சில அற்புதங்களைச் செய்து புகழ் பெற்றிருந்தார். நினைத்த இடங்களுக்கெல்லாம் பறந்து போவார், பறந்து வருவார். அதனாலே அவர் அப்பகுதியில் தான் ஒரு தெய்வீகச் சக்தியுடையவன் என்ற மனக் கர்வத்தில் இருந்தார்.

அந்த மாயக் கம்பளக்காரர், குரு நானக் காஷ்மீரம் வந்திருப்பதை அறிந்து, தன்னுடைய கம்பளத்தின் மீது ஏறிப்-