பக்கம்:மகாபலிபுரத்து ஜைன சிற்பம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இனையன பிறவும் வேசங்கை கொடுக்கும்,
எழுத்தும் சொல்லும் பதமும் சுலோகமும்
விழுத்தகு நூலும் புராணமும் விருத்தமும்
சோதிட நிமித்தமும் சொல்லிய பிறவும்
காளை என்னும் கன நிதி கொடுக்கும்.
உழவும் தொழிலும் வரைவும் வாணிகமும்
செழுமிசை விச்சையும் சீலமும் பிறவும்
ஒழிவுதல் இன்றி மாகாளை கொடுக்கும்,
மரகதம் வச்சிரம் வயிடு ரியமும்
பரவிய நீலமும் பதும ராகமும்
கோமே தகமும் கொழும்புருட ராகமும்
தாமமும் முத்தும் தடமா ணிக்கமும்
சந்திர காந்தமும் சூரிய காந்தமும்
இந்திர நீலமோ டெழுவகை லோகமும்
தவ்வுத லின்றிச் சவ்வாதம் ஈயும்.
இன்னன முதலா பன்னிய பிறவும்
வணியோர்க் கடவச் சக்கர வர்த்தி
பணியி னின்றும் அருளும் என்ப
நவநிதி எல்லாம் நன்கொடு சிறந்தே.

மாவானைத் தச்சன்பெண் மன்னுசே னாபதியும்
காவாளன் சோதிடனும் காகணியும்—தாவாத
சக்கரம் தோல் சூளா மணி தண்டு தண்குடைவாள்
இக்கிரமத் தேழிரண்டாம் ஈங்கு.

இச்சொல்லப்பட்ட பதினான்கு இரத்தினங்களுள்,
ஜீவரத்தினம் ஏழு.

யானைதேர் குதிரை கருவி காலாள்
எத்தனை சூழிலும் அத்தனைக்கு மத்தனையாகி
உழிதரு மரகதமேனி மாவென்னு மிரத்தினமும்,
அண்டமுற் நிமிர்வரைபோ ரானைகளுக் கரியேயாய்
எண்டிசையும் படையிரிய விடியுருமா வெனமுழக்கிக்
காற்றுத்தீ எனக்கடுகிக் காலத் துயிருண்ணும்
கூற்றுப்போல் கொடியதொரு கொலைக்களிறாம் இரத்தினமும்,
பரிப்பந்தி தேர்க்கூட்டம் பாய்களிற்றின் ஒலிகளுடன்
பெருத்துயர்ந்த திண்மதிலும் பீடார்ந்த மண்டபமும்
அம்பலங் களுமறச் சாலையுங்கூ டங்களும்
கோபுரங்களும் குறைவின்றி நிறைவெய்தப்
பன்னிரண்டோ சனைவிரிவாம் பதியமைக்கும் பெருந்தச்சனும், சீதகாலத்தி லுஷ்ணமாய்ச் செழுங்கோடையில் குளிர்சிறந்து
காதல் பெருகும் கவின் இளமையும்
வேந்தர்களால் விருப்புடைய விரைகுழலா ரனைவரிலும்
ஆய்ந்ததோர் குணமுடைய அருங்கலப்பெண் இரத்தினமும், போர்த்தொழிற்கண் நிலையுடைமையும் பொருபடையின் வித்தகமும்
ஆர்த்தமைந்த வாகனங்களின் அழகமைந்த பெருங்கல்வியும்