பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்களகுழு ஒப்பந்தம் 167 மீண்டும் மகிழ்ச்சி மேவப் பெற்றேன் அதற்குக் காரணம் அறிய வேண்டுமா? ஆய உயிர்கள் அனைத்தும் ஓம்பிய தூய புத்தர் தோன்றிய தெக்குலம்? தம்மை வருத்தியோர் தமக்கும் இரங்கிய பெம்மான் சேசு பிறந்த தெக்குலம்? முல்லைக் குத்தேர் முகமலர்ந் தீந்த வள்ளல் பாரி வந்த தெக்குலம்? மயிற்குப் போர்வை மகிழ்ந்து போர்த்தித் துயர் தீர் பேகன் தோன்றிய தெக்குலம்? கன்றினைத் தேரின் காலில் இழந்து நொந்த பசுவின் நோயது தீர்க்க மைந்தனைக் கொன்ற மனுநீதி எக்குலம்? புறாவிற் காகப் பொன்னுடல் ஈந்த செறாநல் அருள்மிகு சிபி'தான் எக்குலம்? வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடிய வடலுார் வள்ளலார் எக்குலம்? தம்மைப் பிறர்க்காத் தந்து முடிந்த எம்மான் காந்தி எந்தக் குலமோ? இவர்தமைத் தேவரென் றெண்ணினேன்; ஆனால் இவர்களும் மாந்தரா யிருக்கக் கண்டேன். எல்லாரும் நம்குலம் எழிலுறும் இந்த நல்லார் அனைவரும் பிறந்தது நம்குலம் என்றநல் லெண்ணம் எழுந்த காலை என்றன் குலத்தை ஏத்தினேன் போற்றினேன் மாந்தர், அரக்கர், மாண்புறு தேவரென மாந்தர் குலத்துளே மன்னும் மூவகை. மாந்த ருட்சிலர் மாறுவர் அரக்கராய்; மாந்த ருட்சிலர் மன்னுவர் தேவராய்.