பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 மக்கள்குழு ஒப்பந்தம் " தொழுந்தன்க் நாவினுக் கரசுந் தொண்டர்முன் செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண் கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற விழுந்தெழுந் தருள் நெறி விளங்கப் பாடுவார்.” இப் பாடல்களில், நாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூர்ப் பக்கத்தில் கரையேறியதாகவும், திருப்பாதிரிப்புலியூரில் சிவனை வழிபட்டதாகவும் சேக்கிழார் கூறியிருக்கிறாரே யொழிய, பாடலிபுத்திரத்தின் பக்கத்தில் கரையேறிய தாகவோ பாடலிபுத்திரத்தில் சிவனை வழிபட்டதாகவோ கூறவில்லை. இதைக்கொண்டு, பாடலிபுத்திரமும் திருப் பாதிரிப் புலியூரும் வெவ்வேறானவை என்பது சேக்கிழார் கருத்து என உய்த்துணரலாம், அடுத்தபடியாக, சமணரைவென்ற நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்மப் பல்லவன், பாடலி புத்திரத்தில் இருந்த சமணக் கோயில், மடம் முதலியவற்றை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் "குணபரேச்சரம்' என்னும் சிவன்கோயில் கட்டியதாகச் சேக்கிழார் பாடியுள்ளார்:

  • வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று

- மெய்யுணர்ந்த காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப் பாடலிபுத் திரத்தில்அமண் பள்ளியொடு பாழிகளும் கூடஇடித் துக்கொணர்ந்து குணபராச் - சரம்.எடுத்தான்’’. என்பது பாடல். இப் பாடலால் பாடலிபுத்திரம் பல்லவ மன்னனால் அழிக்கப்பட்டது என்பது புலனாகும். முற்காலப் பல்லவர்கள் ஆட்சி தொடங்கிய மூன்றாம் நூற்றாண்டி

  • பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 146.