பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 73 ' வெட்டவெளியினில் நாங்கள் - எதிர் வேறொரு காட்சியும் கண்டோம்: குட்டைப் பனைமரம் ஒன்றும் - எழில் கூந்தல் சரிந்ததோர் - ஈந்தும் மட்டைக் கரங்கள் பிணைத்தே - இன்ப வார்த்தைகள் பேசிடும்போது கட்டுக்கு அடங்கா நகைப்பைப் - பனை 'கல கல’ என்று கொட்டிற்றே ' - என்பது பாடலாகும். இங்கே குட்டைப் பனை மரமே காதலன், ஈச்ச மரம்தான் காதலி. ஈந்து என்றால் ஈச்ச மரம். பனைமரம் மிகவும் நெட்டையாயிருக்கும். மிகவும் உயரமாய் இருப்பவரைப் பார்த்து, பனைமரம் போல் வளர்ந்துவிட்டார்’ என்று கூறுவது உலக வழக்கம். ஆனால் ஈச்ச மரமோ பனைமரம்போல் இன்றி ஒரளவு உயரமே இருக்கும். காதலனும் காதலியும் கைகோத்துக் கொள்ள வேண்டுமெனில், நெட்டைப்பனை மரத்திற்கு ஒத்து வராது. அதனால்தான் ஈச்ச மரத்தோடு கைகோத்துக் கொள்ளக் குட்டைப் பனையால் முடிந்தது. பொதுவாகப் பனை மரத்தினும் ஈச்ச மரம் குட்டையானது. காதலி ஈந்தின் கூந்தல் சரிந்தது எப்படி? பனைமரத்தின் மட்டைகள் நேர்க் கோட்டில் நீண்டிருக்கும். நாளாகிய பனைமட்டை இற்று விழும் நிலையில் கீழ்நோக்கித் தொங்குவதை இங்கே எடுத்துக் கொள்ளலாகாது. ஈச்ச மரத்தின் மட்டைகளோ எப்போதுமே-இயற்கையாகவே சரிந்த நிலையில் இருக்கும். இந்த இயற்கை நிலைமை, இன்ப மயக்கத்தால் கூந்தல் சரிந்திருக்கும் நிலைமையை நினைவூட்டுகிறது. கை கோத்துக் கொள்ளலாவது: குட்டைப் பனையும் ஈந்தும் பக்கத்தில் - பக்கத்தில் நெருங்கியிருப்பதால், பனையின் மட்டைகள் ஈந்தின் மட்டைகளுக்குள்ளும் ஈந்தின் மட்டைகள் பனையின் மட்டைகளுக்குள்ளும் புகுந்து