பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9& மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். எனவே, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களை இது வரை, ஆனால், சுருக்கமாக, கலையரங்கக் கண்ணோட்டத்தில் கண்டோம்!

பொது மக்கள் அரங்கம், அவரை எப்படி போற்றிப் புகழ்கிறது என்று பார்ப்போமே?

என் இதயக்கனி

'எம்.ஜி. ஆருக்கும், எனக்கும் இருக்கிற தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மை தான்ே! எம்.ஜி.ஆர். என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எது என்பதை நாடு அறியும். முல்லைக்கு மணம் உண்டு என்பதைக் கூறவா வேண்டும்? இந்தக் கனி, தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.

1958ல் - நாடோடி மன்னன் வெற்றி விழாவில் அறிஞர்

அண்ணா ஆற்றிய உரைப்பகுதி