4
ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது மக்கள் எண்ணம் ஆளவேண்டும்’ இரவுக்கு அழகு சேர்க்கிருர் :
நட்சத்திரங்கள் தாலாட்டும் இந்த இனிமையான கேரத்தில்' மற்ருேரிடத்தில்,
அவள் சாகவில்லே, அவளுக்கிருந்த மரணந்தான் செத்துவிட்டது" என்று கூறிச் சுரதா பாலைவனத்தில் பச்சைப்பலா" வைத்தருகிருர். ஒருத்தியை வெறுத்துப் பேசுகிருன் ஒருவன். அவ்விடத்தில் சுரதா எழுதியுள்ள தொடர் ஆழ்ந்த கருத்தையும் அள்ளுறும் சுவையையும் பயப்பது.
மானப்போல் பார்க்கத் தெரிந்த உனக்கு, அதன் மானத்தைப்போல் வாழத் தெரியவில்லையா?” மங்கையர்க்கரசியில் எங்கும் இவ்வகை இன்பத் தொடர்களைக் காணலாம். மங்கையர்க்கரசி ஒரிடத்தில் தன் உண்மையை விளக்கியும், பிறர் மடமையை எடுத்துக் காட்டியும் பேசும் நீண்ட பேச்சு ஒர் அழகிய சிறு காப்பியமாகும்.
முதலாளிகள் கண்ணே முடிக்கொண்டு. இதோ இந்தக் கதையை எழுதி முடிப்பீர் என்று ஒப்படைத்து விட்டால் கனகச்சிதமாக எழுதி முடித்துத்தர ஒர் எழுத்தாளர் தமிழ்காட்டில் இருக்கிருர். அவர் பெயர் சுரதா, அவர் வாழ்க ! -
14-1-1950 *
புது வை. பாரதிதாசன்