இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9
நடராஜன் கால்பந்து அளவுக்குப் பலூனை ஊதினான். பலூன் பாப்பா சிரித்தது. அப்பொழுது நடராஜன்
“பலூன் பாப்பா பலூன் பாப்பா
கோபங்கொள்ளாதே,
பந்தைக் காட்டிலும் பெரிதாய் ஊதேன்.
வெடித்துப் போகாதே”
என்று பாடிக்கொண்டே ஆடினான். அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.