12
யாரைப் போல
மூன்றாவது வாழ்த்துவதில் ஒரு புதிய முறை. புலவர்களெல்லாம் மலரும் மணமும் போல, வானும் நிலவும் போல, கரும்பும் சுவையும் போல ஒன்றுபட்டு வாழுங்கள் என்று மணமக்களை வாழ்த்துகிறார்கள். நல்லறிஞர்கள் பலர் இராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதாமணி தேவியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் சிலர் காந்தியடிகளும் கஸ்தூரி பாயும்போல, அறிஞர் அண்ணாவும் இராணியும்போல வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்கள் இந்த 70 ஆண்டுகளாகத் திருமணங்களில் பங்கு பெற்று வருகின்றேன். எவராவது ஒருவர் என்னைப்போல என் மனைவியைப் போல வாழுங்கள் என்று சொல்லக் கேட்டதில்லை; சொல்லத் துணிவும் இல்லை. அதனால்தான் அவர்கள், அவர்களைப்போல, இவர்களைப்போல வாழுங்கள் என்று சொல்லிப் போய்விடுகிறார்கள். நான் ஏன் இதை இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், இன்று திருமணம் புரிந்து கொள்ளும் மணமக்கள், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மணமக்களை வாழ்த்தும்போது, என்னைப்போல, என் மனைவியைப்போல, என்னைப்போல என் கணவனைப்போல வாழுங்கள் என்று இருவரும் வாழ்த்தியாகவேண்டும் என்பதற்காகவே, அதற்கு அவர்கள் இப்போதே திட்டமிட்டு வாழ்க்கையைத் தொடங்கியாகவேண்டும்.
பொறுப்பு அதிகம்
ஐயரை வைத்துச் சடங்குகளைச் செய்து திருமணம் நடத்துகிற மணமக்கள், எவ்வளவு தவறுகளைச் செய் தாலும், இந்த நாடு தாங்கிக்கொள்ளும், இம்மாதிரிச் சீர்திருத்தத் திருமணம் செய்துகொண்ட மணமக்கள் ஒரு சிறு தவறு செய்தாலும் நாடு தாங்காது; ஏற்காது. இன்று