பக்கம்:மணமக்களுக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



16

கூரைத் தாழ்வாரம், அதிலுள்ள பல ஒட்டைகள், கிழிந்த பாய், சில சட்டிகள் மட்டுமே இருந்தன. அந்த ஏழை, வள்ளுவரைக் கண்டதும் வணங்கி, "ஐயா! என் குடிசைக்கா வந்தீர்கள்? என்னிடம் ஒன்றும் இல்லையே" என்றான். வள்ளுவர் மனமகிழ்வோடு பார்த்தார். அவன் அருகிலுள்ள மனைவி நற்குண நற்செய்கைகளையுடையவளாய்க் காணப்பட்டாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொன்ன ஏழையிடம் கேட்டார். "அடே! உனக்கு என்னடா இல்லை;" என்று வெளியில் வந்தார்.

உள்ளது என்?

எதிர் வீட்டில் ஒரு செல்வன் ஏழு அடுக்கு மாளிகையைக் கட்டிக்கொண்டு, வள்ளுவரை என் இல்லத்திற்கு வாருங்கள் என்று எதிர்கொண்டழைத்தான் வெள்ளிக் கொப்பறை, தங்கத் தாம்பாளங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், முத்துக்கள், மணிகள், எளிதில் உருளும் நிலைப் பெட்டிகள், என்றும் அசையாத இரும்புப் பெட்டிகள் முதலியவைகளெல்லாம் காட்டி, ஏழாவது மாடிக்கு அழைத்துச் சென்று, இங்குத் தெரிகிற 200 காணி நன்செய் நிலங்களும் என்னுடையவை; இரண்டு குளத்து நீரும் எனக்குச் சொந்தப் பாசனம்; இருபது காளைகள், பத்துப் பசுக்கள், இரண்டு குதிரைகள் யாவும் இருக்கின்றன; ஒரு யானையும் நாளை வந்து விடும் "எனக்கு எல்லாம் இருக்கிறது" என்று மகிழ்ந்து கூறினான். வள்ளுவர் உற்றுக் கவனித்தார். அவன் அருகிலிருந்த மனைவி நற்குண நற்செய்கைகளை உடையவளாய்க் காணப்பட வில்லை. தனக்கு எல்லாம் இருக்கிறது என்று சொன்ன செல்வனிடம், "பாவிப் பாயலே உனக்கு என்னடா இருக்கிறது?" என்று கேட்டுவிட்டு, வெளியில் வந்துவிட்டார். இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது? ஒருவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/18&oldid=1307453" இலிருந்து மீள்விக்கப்பட்டது