பக்கம்:மணமக்களுக்கு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



26

யளிக்கும். தேவைக்கு மேற்பட்ட சாமான்களை வீட்டில் அடைத்துவைக்கக் கூடாது அது வீட்டிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, மூளையிலும் ஒரு அடைசலை ஏற்படுத்தி, நாள்தோறும் துன்புறுத்தி வரும், தேவையான பொருள்களை மட்டும் வாங்கி வைத்து, வீடுகளில் அழகாக அடுக்கி வைத்து, காண்போர் மனம் மகிழும்படி சிக்கன வாழ்வு வாழ்வதே நல்வாழ்வுக்கு வழியாகும்.

உணவிலும், உடையிலும். பயணத்திலும், பொருளாதாரத்திலும், சேமிப்பிலும் மட்டுமல்ல, குழந்தை பெறுவதிலும் சிக்கனத்தைக் கையாண்டு தீரவேண்டும் பலர் அதிக சாமான்களை எடுத்துக்கொண்டு இரயிலிலும், பஸ்ஸிலும் பயணம் செல்கிறார்கள். இவற்றைத் தாங்களும் தூக்க முடியாமல், தூக்குவதற்கு ஆளும் கிடைக்காமல் கிடைக்கும் இடங்களில் அதிகக் கூலியும் கொடுக்க நேர்ந்து, சாமான்களும் களவுபோய், போகவேண்டிய இடங்களுக்குப் போக முடியாமல் தவித்துத் திண்டாடுவதைப் பார்க்கிறோம்.இத்தகையோருடைய வழிப்பயணத்தையும், சுமையையும், தொல்லையையும், துன்பத்தையும் அதிகக் குழந்தைகளைப் பெற்றவர்களும் அனுபவித்தாக வேண்டும். ஆகவே எதிலும் சிக்கனம், எல்லாவற்றிலும் சிக்கனம் என்ற வாழ்க்கையை மணமக்கள் இன்று முதலே கையாளத் தொடங்குவது நல்லது.


ஒழுக்கம்

11. ஐயரை வைத்து, மந்திரம் கூறி, அக்கினி வளர்த்து, சடங்குகள் பலவற்றைச் செய்து திருமணம் செய்து கொள்கிறவர்கள், வாழ்க்கையில் எப்படி நடந்து கொண்டாலும் இவ்வுலகம் தாங்கிக் கொள்ளும். தமிழ்த் திருமணம், சீர்திருத்தத் திருமணம் செய்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/28&oldid=1306712" இலிருந்து மீள்விக்கப்பட்டது