பக்கம்:மணமக்களுக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



33

என்பது புலனாகிறது. ஆகவே மணக்கள் தங்கள் உள்ளத்தைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பறங்கிக்காய் அளவு பூசணிக்காய் அளவு பெரிதாக்க முடியாவிட்டாலும் தேங்காயளவு மாங்காயளவேனும் பெரிதாக்கிக் கொள்ளலாம். அதுவும் முடியாதவர்கள், நெல்லிக்காய் அளவேனும் கடுக்காய் அளவிலேனும் தங்கள் உள்ளத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். கடுகு உள்ளமும், துவரை உள்ளமும் ஒரு போதும் கூடாது.

உள்ளத்தை உயர்த்திக் கொள்ளுவது என்பது பெருமனம் படைப்பது என்றாகும். அது தாமும் வாழ்வது பிறரும் வாழ்வது என்பது, பிறரை வாழவைத்து வாழ்வதே பெருவாழ்வு என்பது வள்ளுவர் கருத்து. அது இரக்க மனம் படைப்பதும், இரப்பவர்க்கு வழங்குவதும், எளியவர்க்கு உதவுவதும் ஆகும். இதுமட்டுமல்ல; தாழ்ந்த வரைப் பழிக்காததும், உயர்ந்தவரைத் தாழ்த்தாததும் உள்ளத்தை உயர்த்திக் கொண்டவருடைய செயல்களாகும். இவையே நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகள், இவைகளை மணமக்கள் உள்ளத்தே வைத்து, வாழத் தொடங்குவது நல்லது.

ஒத்த உரிமை

18. ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள். இருவரும் B.Sc, பட்டதாரிகள். இருவருக்கும் ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த நிறம், ஒத்த உயரம், ஒத்த குலம், ஆக, இவர்கள் இருவரும் தங்கள் திருமணத்திற்குப் பெற்றோருடைய ஒப்புதலையும் பெற்றுவிட்டனர். ஆனால், திருமணம் மட்டும் நடை பெறவில்லை. ம-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/35&oldid=1309248" இலிருந்து மீள்விக்கப்பட்டது