பக்கம்:மணமக்களுக்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூ. ஆலாலசுந்தரம் எம். ஏ.,

முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்

சென்னைக் கிறித்தவக் கல்லூரி,

சென்னைப் பல்கலைக்கழகத்

தமிழ்ப் பேரகராதித்திருத்தப்பணி

வல்லுநர் குழு உறுப்பினர் அவர்களின்



அணிந்துரை

முத்தமிழ்க் காவலர் திரு. கி. ஆ. பெ. விசுவநாதன் அவர்கள் 80 ஆண்டுகள் நிரம்பப்பெற்ற முது பேரறிஞராவர். அவர் பல்லாண்டுகளாகத் தமிழ்த் தொண்டு, சமயத்தொண்டு, சமூகத்தொண்டு முதலிய பலதிறப்பட்ட தொண்டுகளில் ஈடுபட்டு வருகின்றார். திருக்குறளைப் பட்டி தொட்டிகளில் பரப்பிவருவது அவரது சிறந்த தமிழ்ப் பணியாகும். அவரது அயரா உழைப்பின் பயனால், தமிழ்நாடு எங்கும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படு கிறது. தமிழக அரசினரும் திருவள்ளுவர் திருநாளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். என் அரிய நண்பர் முத் தமிழ்க்காவலர் அவர்கள் 1958-ம் ஆண்டில் 49 புலவர்கள் அடங்கிய தமிழகப் புலவர் குழுவினைத் தோற்றுவித்து, அதன் வாயிலாகவும் சிறந்த தமிழ்ப் பணிஆற்றி வருகின்றார். சமயத்துறையில், "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்ற கொள்கை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/6&oldid=1525836" இலிருந்து மீள்விக்கப்பட்டது