பக்கம்:மணிவாசகர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தனை படலங்களாக, இத்துணைச் செய்யுட்களால், இன்ன இன்ன செய்திகளை இன்ன இன்ன விடத்திற்றான் கூறவேண்டு மென்பதற்காக வரையறுத்துக் கொண்டே செய்து முடித்தனரென்பது நன்கு விளங்கும் என்க. இனி, பரஞ்சோதி முனிவரும் இங்ங்னமே தாமியற்றிய .திருவிளையாடற் புராணத்தில் ஐம்பத்தெட்டுப் படலங் கட்குப்பின் கூறப்போகும் வாதவூரடிகட்கு உபதேசித்த படல'த்திலும் அவர் தொடர்புடைய பிறபடலங்களிலும், 'துளும்ப அழுதகண்ணினர்' என்றும் அழுது சாத்தும் மெய் யேன்பர்’ என்றும் அழுதிசை பாடுந் தொண்டிலகப்படும் பாதம்' என்றும் கூறப்போவனவற்றை நினைவில் வைத்துப் பாயிரத்தின் கண்ணே அழுதடி அடைந்த அன்பன்' என்று கூறியிருப்பதை நோக்கின் அவரும் தம் நூலை வரையறுத் துக்கொண்டு இயற்றினாரென்பது நன்கு விளங்கும். 3. 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/48&oldid=852785" இலிருந்து மீள்விக்கப்பட்டது