பொருள் அவரிடம் இருத்தல் ஒருதலையன்று. இல்லாவிடி தும் தேடிக் கொடுக்குங் கருத்துடையராயிருப்பின். முற்று முணர்ந்தவரல்ல ராகையால் அதனைப் பெறுதற்குரிய நெறியைப் பிழைபாடின்றி உணரும் ஆற்றலுடையவரா கார். ஒருவாறு பிழையின்றி உணர்ந்து முயலினும் என்பு தோல், நரம்பு முதலியவற்றா லாக்கப்பட்ட உடம்புடைய வராதலின் உடல் நலம் அம்முயற்சி காரணமாகக் குறையின் அதனைக் கைவிடுவர். எங்ங்னமாயினும் அதனைப் பெறு தற்கு முடிவிலாற்றலுடையவருமல்லர். இத்துணையுங் கடந்து ஒரோவழி அது அவர்க்குக் கிடைப்பினும், வரம்பி லின்பமுடையவ ரல்லராதலின் தம் முயற்சியின் பெருமை யும், அப்பொருளின் அருமையும் நோக்கித் தம்மின்ப நிறை வுக்கு அதனை ஆக்கிக் கோடலுங் கூடும். அல்லது கிடைப் பினுங் கிடைக்கலாம். எனவே, மக்கள் தலைவரிடம் நாம் அழுது வேண்டும் பொருள் நமக்குக் கிட்டுதல் ஐயமே யன் றித் தேற்றமில்லை. அவர் கடவுள் தலைவராயிருப்பின் பேரருளுடைமையும், எல்லாமுடைமையும், முற்றுணர்வு டைமையும், வரம்பிலின்பமுடைமையும் அவரிலக்கண மாதலின் அப்பொருளை நாம் அடைதல் முக்காலும் உறுதி 看「@f5。 - இன்னும், ஒர் அரிய மகவின் அழுகையானது பொது வாகத் தமிழுலகத்திற்கும் சிறப்பாகச் சைவ உலகத்திற்குஞ் செய்த நன்றியை இங்கு மறக்க ஒண்னுமோ? அன்றி மறைக்க ஒல்லுமோ? இலைபடர்ந்த பொய்கைக் கரையில் செம்மேனி வெண்ணிற்றான் திருத்தோணிச் சிகரத்தை நோக்கி, தம்புனித வாயைத் திறந்து, அம்மே அப்பா' என் தழைத்து, கண்மலர்கள் நீர்ததும்ப, கைம்மலர்களாற் பிசைந்து வண்ணமலர்ச் செங்கனிவாய் மணியதரம் புடை துடிப்ப, வேதநெறி தழைத்தோங்கவும், மிகு சைவத்துறை விளங்கவும் பூத பரம்பரை பொலியவும் பொருமி அழா விடின் நீறு எங்கே? மறை எங்கே?திருவைந்தெழுத்தெங்கே? திருநெறித் தமிழ்மறை எங்கே? இவையாவும் நிலைபெற 岳翠