பக்கம்:மணிவாசகர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வேற்று விகாரவிடக் குடம்பினுட் கிடப்ப ஆற்றேன்எம் ஐயா அரனேயோ" எனவும், "தினைத்துணையேனும் பொறேன் துயராக்கையின் றிண்வலையே’ எனவும், விடக்கூன் மிடைந்த, சிதலைச்செய் காயம் பொறேன் சிவனே முறையோ முறையோ,' எனவும், மொய்ப்பா னரம்பு கயிறாகமூளை யென்புதோல் போர்த்த குப்பாயம் புக்கிருக்க கில்லேன்' எனவும், "சீஆர்ந்தீமொய்த்தழுக் கொடுதிபுரிஞ் சிறுகுடிலிது சிதையக், கூவாய் கோவே' எனவும், 'மிடைந்து எலும்பூத்தை மிக்கழுக்கூறல் வீறிலி நடைக்கூடம் தொடர்ந்தெனை கலியத் - துயருறுகின்றேன்' எனவும், நோயுந்துன்பமுங் கொண்டார் பொறுக்கலாற். றாது பதறிக் கதறுவதுபோல அரற்றி அழுதனர் என்க. இனி, யானே பொய்' என மேலே காட்டிய பாட்டுள், "அழுதாலுன்னைப் பெறலாமே என்ற தொடரிலுள்ள ஏகாரத்தை வினாவாகக் கொண்டு அதனாற்போந்த் பொருள் பெறலாகாது என முடித்து. பொய்யாகிய அன் புடைய யான் அழுவதனால் பயன் யாது? அன்பற்ற-மாய அழுகையால் உன்னைப்பெற முடியாது எனக்கொள்ளுவதே அடிகள் கருத்தாகும் எனக் கூறலாமோவெனின் கூறலாம்: —5 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/73&oldid=852813" இலிருந்து மீள்விக்கப்பட்டது