பக்கம்:மணி பல்லவம் 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

மணிபல்லவம்

விசாகை அவனை வாழ்த்திவிட்டுச் சொன்னாள்:

“இந்தக் கொடி வெற்றிக் கொடியாக உயரட்டும்.”

இளங்குமரன் நீலநாகமறவரோடு தேர் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான். அவனைப் பூம்புகாருக்கு அழைத்துச் செல்லத் தேர் காத்திருந்தது. தன்னுடைய ஞான குருவின் கண்களை மானசீகமாகப் பாவனை செய்து கொண்டே நடந்தான். எதிரே அவனுடைய வழி நீண்டு விரிந்து கிடந்தது.

(இரண்டாம் பருவம் முற்றும்)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_2.pdf/156&oldid=1150042" இலிருந்து மீள்விக்கப்பட்டது