பக்கம்:மதன கல்யாணி-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

452 மதன கல்யாணி

செய்யாமல் உன் மனம் போல எழுதிக் கொள்ளலாம். உன் விஷயத்தில் வஞ்சகம் செய்ய வேண்டும் என்னும் நினைவிருந் தால் அல்லவா எனக்குக் கவலை; எங்கே? சொல், எழுதுகிறேன்” என்று வற்புறுத்திக் கூறினான்.

அதைக் கேட்ட பாலாம்பாள் அதற்கு மனமில்லாதவள் போல சிறிது பாசாங்கு செய்தவளாய், “அடாடா! நானா சொல்லுகிறது? எனக்கென்ன தெரியும்? நான் ஒரே வாக்கியமாக முன்னமேயே சொல்லி விட்டேன்; அதைத் தான் எழுத வேண்டும்; சரி; தங்ளுடைய உத்தரவாகும் போது எனக்கு பயமென்ன? எங்கே? எழுதுங்கள் சொல்லுகிறேன்:- . .

சென்னை ஆலந்துருக்கு அருகில், மவுண்டு ரோட்டில் உள்ள ஜெகன்மோகன விலாஸ் என்ற பெயர் கொண்ட பங்களாவில் இருக்கும் மைசூர் பாலாம்பாள் அம்மாளுக்கு, சென்னை தேனாம் பேட்டையில் உள்ள மாரமங்கலம் மைனர் ஜெமீந்தாரான - துரை அவர்கள் எழுதிக் கொடுத்த விவாக ஒப்பந்தப் பத்திரம்.

நான் என் மனப்பூர்வமாக உன்மேல் காதல் கொண்டு, என்னுடைய ஆயுசுகால பரியந்தம் உன்னையே என்னுடைய பாரியாளாகவும், என்னுடைய மைனர் பருவம் நீங்கிய பிறகு பட்டமகிஷியாகவும் பாவிக்க நான் என் மனதார விரும்புகிறேன். நமது ஜாதிவித்தியாசத்தைக் கருதி, நான் உன்னை அக்கினி சாட்சியாகப் பாணிக்கிரகணம் செய்து கொள்ளக் கூடாது இருந் தாலும், இந்த ஒப்பந்தத்தையே அப்படிப்பட்ட கலியாணம் நடந்த தற்கு சமானமாக ஒப்புக் கொள்ள இதன் மூலமாக நான் கட்டுப் படுகிறேன். நான் உன்னைத் தவிர, என் ஆயுசு காலத்தில் வேறே எவரையும் இனி அக்கினி சாட்சியாகக் கலியாணம் செய்து கொள்ளுகிறதில்லை. தவறி செய்து கொண்டாலும், நீயே முதல் மனைவியாகவும், உன் வயிற்றில் பிறக்கும் முதல் புத்திரனே சமஸ் தானத்துக்கு பிந்தி வார்சாகவும் ஆக இதன் மூலமாய் உங்களுக் நான் உரிமை ஏற்படுத்தி இருக்கிறேன். உன்னை நான் பாரியாளாக ஏற்றுக் கொண்ட இந்த நாள் முதல் மாதம் ஒன்றுக்கு உன்னுடைய தேக போஷணைச் செலவுக்காக ரூபாய் ஐயாயிரம் கொடுத்துவர நான் கட்டுப்படுகிறேன். உன்னுடைய வயிற்றில் குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/170&oldid=649612" இலிருந்து மீள்விக்கப்பட்டது