பக்கம்:மதன கல்யாணி-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 மதன கல்யாணி

எப்போதும் எனக்கு எஜமானராக இருந்து என்னை ஆண்டு அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்பதேயன்றி, இந்த வெறுங் காகிதத்தையா நான் கேட்டேன்? சரி சரி; நாளைக்கு என் வயிறு பசிக்கிறது என்றால், இந்தக் காகிதத்தையே பகடினம் பண்ணும் படி தாங்கள் தாராளமாக உத்தரவு அளிப்பீர்கள் போலிருக்கிறதே! ஒாே மூர்த்தி சிறிதாயிருந்தாலும் கீர்த்தி பெரிதாய் இருக்கிறதே! தாங்கள் வயதில் பாலியராயிருந்தும் சாமர்த்தியத்தில் எல்லோரை யும் வென்று விடுவீர்கள் போலிருக்கிறதே! அவ்வளவு சாமர்த்தியம் இல்லாமலா இரவு இரண்டு மணிக்கு இந்த பங்களாவுக்குள் நுழைந்து முன்பின் பழக்கமில்லாதவளும் எப்படிப்பட்டவர்க்கும் மசியாதவளுமான ஒரு பெண்ணை ஒரே நொடியில் மயக்கி, ஆயுசுகால பரியந்தம் அடிமையாக்கிக் கொண்டு விட்டீர்கள்!” என்று பரிகாசமாகக் கூறிக்கொண்டே எழுந்து போய் சுவரிலிருந்த ஒர் அலமாரிக்குள் அதை வைத்து, தனது கழுத்து மணியிலிருந்த திறவுகோலால் அதைப் பூட்டி விட்டு வந்து, பால் கூஜா, வெற்றிலை பாக்குத் தட்டு முதலிய சாமான்கள் இருந்த மேஜையைக் கட்டிலிற்கு அருகில் இழுத்து வைத்து விட்டு, திரும்பி வந்து முன்னிருந்த இடத்தில் அவனிடம் மிகவும் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். அவ்வளவு கண்டிப்பாக தான் அவனிடத்தில் பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டதைப் பற்றி மைனரது மனதில் ஒருவகையான அதிருப்தி உண்டாயிருக்குமோ என்ற எண்ணம் கொண்டவளாய், அவன் ஊக்கமும் சந்தோஷமும் கொள்ளும்படி செய்ய நினைத்தே அவள் அவனை அதிகமாக முகஸ்துதி செய்தாள். அவளது மையலில் கண்தெரியாது மூழ்கி வெறி கொண்டு மதிமயங்கியிருந்த மைனர் அவள் சொன்ன ஸ்தோத்திர மொழிகளை உண்மை என்று மதித்து பெரிதும் ஆனந்தமும் உற்சாகமும் கொண்டவனாய் கலகலவென்று நகைத்து அவளை நோக்கி, “நீ மாத்திரம் சாதாரணமான ஆசாமியோ இந்த வெறுங்காகிதத்தோடு நான் உன்னை விட்டு விட்டால், நீ தயைதாrணியம் இல்லாமல் என்னைக் கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட மாட்டாயா! இனிமேல் நான் எப்போதும் எஜமானியம்மாளுக்குப் பயந்தல்லவா நடக்க வேண்டும்” என்று தானும் அவளை முகஸ்துதியாகப் புகழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/172&oldid=649614" இலிருந்து மீள்விக்கப்பட்டது