பக்கம்:மதன கல்யாணி-1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155

வண்ணம் மோகாவேசத்தோடு தனது கைகளால் அவளது அழகு வழிந்த மினுமினுப்பான சிவந்த தேகத்தை அனைத்துத் தழுவ முயன்றவனாய், “சரி திருடன் வழி செய்யாமல் உள்ளே நுழைந்து விட்டான் என்று முன்பு சொன்னாயே இப்போதும் திருடன் என்றே மதிக்கிறாயா? அல்லது சொந்தக்காரன் என்று மதிக்கிறாயா?” என்றான். அதைக் கேட்ட பாலாம்பாள் மகிழ்ச்சியோடு நகைத்த வண்ணம், சரி தயவு செய்து எழுந்து வாருங்கள்; இந்தக் குடும்பத்துக்கு இனி தாங்கள் மகாராஜா அல்லவா, தங்களுடைய சிம்மாசனத்தில் தங்களை உட்கார வைத்தல்லவா தங்களுக்கு முடிசூட்டி ராஜ்யத்தை தங்களிடம் ஒப்புவிக்க வேண்டும்” என்று கூறிய வண்ணம் சோபாவை விட்டெழுந்து, இடக்கரத்தால் அவனது இடையைச் சுற்றி அணைத்துக் கொண்டவளாய் அருகிலிருந்த வில்வைத்த சொகுசான பஞ்சணைக்கு அவனை அழைத்துச் சென்று, அதன் மேல் அவனை உட்கார வைத்து, தானும் அவனுக்கு அருகில் உட்கார்ந்து கொள்ள, அப்போதே சாயுஜ்ய பதவியிலிருப்பவன் போல மைனர் தன்னை மறந்து பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து ஆனந்த பரவசமுற்று மோகலாகிரி கொண்டு, மிகுந்த காம வெறியோடு அவளைக் கட்டித்தழுவி முத்தமிட முயல, அதற்குள் அவள் சிறிது விலகி “கொஞ்சம் பொறுங்கள்; சுவாமியின் நிவேதனத்துக்காக கிழவி, குழம்புப்பால், தாம்பூலம் முதலியவைகளை வைத்திருக்கிறாள். அவைகளின் மேலும் எஜமானருடைய கிருபா நோக்கம் கொஞ்சம் ஏற்படட்டும்” என்று கூறிய வண்ணம், பால் இருந்த கூஜாவை எடுத்து மைனரிடம் கொடுக்க, அவன் அன்று இரவு முற்றிலும் ஒடியலைந்து தளர்வடைந்து போயிருந்தவன் ஆதலால், அதை வாங்கி பால் முழுதையும் உள்ளே செலுத்தி விட்டான். அதன் பிறகு பாலாம்பாள் மிகவும் பட்சமாக அவனுக்குத் தாம்பூலம் கொடுக்கத் தொடங்கி வெற்றிலையை மடித்துச் சுருள்களை ஒவ்வொன்றாகக் கொடுத்துக் கொண்டே இருக்க, மைனரது திரேகம் சுருதி கூட்டப்பட்ட வீணையைப் போல பிரம்மாநந்த வெள்ளம் கரை புரண்டோடத் தக்க நிலைமையில் இருந்து பாலாம்பாளை ஆலிங்கனம் செய்து கொள்ளும் பொருட்டு பறக்கிறது. தாம்பூலம் கொடுத்து அவள் எப்போது நிறுத்துவாளோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/173&oldid=649615" இலிருந்து மீள்விக்கப்பட்டது