உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதன கல்யாணி-1.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 24?

ஆதலால், சப் இன்ஸ்பெக்டர், அவரது மொழியை உண்மையான தென்று நம்பிவிட்டார். உள்ளே அடைபட்டிருந்த பையன் யாவன் என்பதை அவர் மூலமாக அறிந்து கொள்ளலாம் என்பதை ஆவலோடு எதிர்பார்த்த அவரது எண்ணம் ஏமாற்றம் அடையவே, அவர் அதற்கு மேலே வார்த்தை ஒன்றும் சொல்ல மாட்டாமல் மெளனம் சாதித்தவராய்த் தமது மேஜையை நோக்கி நடந்தார்.

சிவஞான முதலியார் இன்னொரு முறை அவரிடம் மன்னிப்புக் கேட்டு விடை பெற்றுக் கொண்டு, ஸ்டேஷனை விட்டு வெளிப்பட்டார். வெளிப்பட்டவர், விசையாக நடந்து தமது பெட்டி வண்டி நின்ற இடத்திற்கு வந்து, அதில் ஏறி உட்கார்ந்து கொண்டு, வண்டியைத் திருப்பி விடும்படி வண்டிக்காரனிடம் கூற, அவன் அவ்வாறே திருப்பி, வந்த வழியிலேயே ஒட்ட ஆரம்பித்தான். அவர் எவ்விதமான செய்தி கொண்டு வருவாரோ என்று பெரிதும் ஆவல் கொண்டு தவித்திருந்த கல்யாணியம்மாள் அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் இருந்தாள். வண்டி சிறிது தூரம் சென்றவுடனே, சிவஞான முதலியார், பின்னால் திரும்பிப் பார்த்து போலீஸ்காரன் எவனும் தொடர்ந்து வரவில்லை என்பதை ஆராய்ந்து பார்த்துக் கொண்டு, கல்யாணியம்மாளை நோக்கி, “சரி; அவன் தான் இருக்கிறான். வேறே வழி இல்லை; அந்த நாடகக்காரி யிடம் போய் முயற்சி செய்தாலல்லது பையன் தப்பமுடியாது. அவளிடம் போவோம்” என்று மிகுந்த கவலையோடு கூறினார்.

அதைக் கேட்ட கல்யாணியம்மாள் சகிக்க ஒண்ணாத சஞ்சலம் அடைந்து, “அப்படியானால், பையனும் உங்களைப் பார்த்தானா? என்ன சொன்னான்?” என்று மிகுந்த விசனத்தோடு கேட்க, முதலியார் “அலுத்துப் போய்த் துங்கிக் கொண்டிருக்கிறான். தான் யார் என்பதை அவன் இன்னமும் வெளியிடவில்லையாம். அவனுடைய புகைப்படத்தோடு சில ஜெவான்கள் அவனைப் பற்றி விசாரிக்கப் போகிறார்களாம். இந்த பாலாம்பாள் நோயாகப் படுத்திருக்கிறாளாம். போலீஸார், நாளைக் காலையில் இவளிடம் வாக்குமூலம் வாங்கியவுடன், அவனைப் சப் ஜெயிலுக்கு அனுப்புவார்கள். அதற்குள் நாம் முற்பட்டு இவளை சரிப்படுத்த வேண்டும். பையன் இன்னான் என்பதை வெளியிடாமல், நான் ம.க.i-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/259&oldid=649748" இலிருந்து மீள்விக்கப்பட்டது