பக்கம்:மதன கல்யாணி-1.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 மதன கல்யாணி

களுள் அவள் ஒருத்தியாம். அவளது அழகையும் திறமையையும் கண்டு மோகித்து, அவளை அடைய மாட்டாமல் ஆயிரக் கணக்கில் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள் மதிமயங்கி அலை கிறார்களாம். அவர்களுள் ஒருவனான யெளவனப் புருஷன் ஒருவன் சென்ற இரண்டு தினங்களாக அந்த பங்களாவுக்கு அருகில் காத்திருந்து அவளிடம் தனது ஆசையை வெளியிட, அவள் அதற்கு இணங்கவில்லையாம். அதனால் அவள் மீது கோபங் கொண்ட பையன் அவளை பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகும் கருத்தோடு சுமார் பத்து ஆள்களுடன் அவளது பங்களாவில் நுழைந்தானாம். அங்கே கூச்சலிட்ட மூன்று வேலைக் காரிகளை ஸ்மரணை தப்பிப் போகும்படி அடித்துப் போட்டு விட்டு, பாலாம்பாள் இருந்த மேன்மாடத்திற்குள் போய் சுமார் ஐம்பதினாயிரம் ரூபாய் பெறுமானமுள்ள ஆடை ஆபரணங்களை அபகரித்துக் கொண்டு, அவளை பலவந்தமாகத் துக்கும் முன், அவளால் டெலிபோன் மூலமாக அனுப்பப்பட்ட செய்தியைக் கேட்ட ஆலந்துர் போலீஸார் மோட்டாரில் சென்று உள்ளே நுழைய, திருடர்கள் எல்லோரும் தப்பியோடி விட்டனர். அவர்களை அழைத்து வந்த யெளவனப் புருஷன் மாத்திரம் ஒட மாட்டாமல் படுக்கையின் கீழே ஒளிந்து கொள்ள, அவனை போலீஸார் எவ்வளவு வற்புறுத்தியும், அவன் தனது பெயரையும், தான் யாவன் என்பதையும் சொல்ல மாட்டேன் என்கிறான். தான் அன்று இரவு இரண்டு மணிக்குத் தான் அந்த பங்களாவுக்குள் நுழைந்து அவளோடு சிநேகம் செய்து கொண்டதாக அவன் தாறுமாறாகப் பேசுகிறான். அவள் தான் மாத்திரம் தனிமையில் இருந்ததாகச் சொல்லிவிட்டு மூன்று மணிக்கு ஸ்மரனை தப்பிப் படுத்தவள் இன்னமும் எழுந்திருக்கவில்லை; டாக்டருடைய பார்வையில் இருந்து வருகிறாள். அந்த யெளவனப் புருஷனுக்கு வயது இருபதிற்கு மேலிராது; அவன் குள்ளமாகவும் கருப்பாகவும் மெலிந்தும் காணப்படுகிறான். முதுகு சிறிது கூனலாக இருக்கிறது. தலை மயிர் கிராப் செய்யப்பட்டிருக்கிறது. அவனுடைய மார்பில் மாம்பிஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு மச்சம் இருக்கிறது. தேனாம் பேட்டையில் உள்ள பங்களாக்களில் அவனை எங்கேயோ பார்த்திருப்பதாக சில போலீஸ் ஜெவான்கள் சொல்லுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/276&oldid=649787" இலிருந்து மீள்விக்கப்பட்டது