பக்கம்:மதன கல்யாணி-2.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ $8 மதன கல்யாணி


இப்படிப்பட்ட துர்நடத்தைக்கு மாத்திரம் நான் இடங்கொடுக்க மாட்டேன். நம்முடைய ஜாதியென்ன குலமென்ன! நம்முடைய முன்னோருடைய பெருமையென்ன எத்தனை லட்சம் ஜனங்கள் அதிபதியாக மதித்து வணங்கிக் கொண்டாடத்தக்க தாய் தந்தைக ளுடைய வயிற்றில் பிறந்த நீ என்ன காரியம் செய்யத் துணிந்தாய்! இதனால் உனக்கும், எங்களுக்கும், இந்தக் குடும்பத்தாருக்கும் எப்படிப்பட்ட ஏச்சும், என்றைக்கும் மாறாத இழிவும், துன்பங் களும் நேரும் என்பதை நீ கொஞ்சமாவது எண்ணிப் பார்த்தாயா? இந்தச் சங்கதி வெளியில் தெரிந்தால், உம்முடைய வீட்டில் கேவலம் ஒரு நாய் தண்ணிர் குடிக்குமா? உன்னையும், கோமள வல்லியையும் கலியாணம் செய்து கொள்ள எவராவது சம்மதிப் பார்களா? குழந்தாய்! இப்போது எனக்கிருக்கும் ஆத்திரத்தில், உன்னை அப்படியே கம்பத்தில் கட்டிவைத்து, கரண்டிக் காம்பைப் பழுக்கக் காயவைத்து, உன்னுடைய இரண்டு துடைகளிலும் சூடுபோட்டு விடவும் நான் பின்வாங்க மாட்டேன். உன்னுடைய முகத்தழகைப் பார்க்க, என்னுடைய உள்ளம் இரக்கத்தினால் பாகாய்க் கரைந்து போகிறது; நான் அதிசீக்கிரத்தில் உனக்குக் கலியாணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஏற்பாடு செய்து கொண்டிருப்பது உனக்கு நன்றாகத் தெரியும்; அப்படி இருந்தும், இதற்குள் உனக்கு இவ்வளவு ஆத்திரமா? எல்லா விஷயத்திலும், நீ எங்களை எல்லாம் மீறி அதிக புத்திசாலித் தனமாகப் பேசுகிறவள் அல்லவா, அதனால் உன்னுடைய புத்தி, உனக்குச் சரிசமானமாக ஒரு ஜெமீந்தார் வீட்டுப் பிள்ளையை நாடாமல், கேவலம் கூலிக்கு வேலை செய்யும் அநாதைப் பையனான ஒருவனை நாடியதா? இப்படிப்பட்ட இழிவான ஸ்தானத்தை நாடி அப்படியாவது சுகமடைவதைவிட, உன்னுடைய பாழும் சரீரத்தைக் கேவலம் நெருப்பில் போட்டுக் கொளுத்தி விடலாமே! ஆகா! என் வயிறு பற்றி எறிகிறதே! இப்படிப்பட்ட விபசார புத்தியுடைய பெண் என் வயிற்றிலா வந்து பிறக்க வேண்டும்! இந்தச் சமயத்தில், எவரேனும் வந்து, “இவள் உன்னுடைய மகள்தானா?” என்று கேட்டால், “இவள் என்னுடைய மகளல்ல” என்று நான் பிரமாணம் செய்து மறுத்து விடுவேன். துரைஸானி என்ன காரியம் செய்யத் துணிந்தாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/122&oldid=645859" இலிருந்து மீள்விக்கப்பட்டது