பக்கம்:மதன கல்யாணி-2.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மதன கல்யாணி

போல, கலகலவென்று உதிர்ந்து வெள்ளமாக ஓடின. ஈசனது நெற்றிக்கண்ணைப் போல பசவண்ண செட்டியார் தமது கண்களை விழித்து அவளைப் பார்த்த பார்வையில், அவளது தேகம் பஸ்மீகரமாகிப் போய்விடுமோ என்று நினைக்கும்படி இருந்தது. கல்யாணியம்மாள் அவமானத்தினால் துடிதுடித்து ஏதோ மறுமொழி கூற வாயெடுக்க, வாய் குழறியது. கண்கள் திருட்டு விழி விழிக்கின்றன. உண்மையில் அவள் மதனகோபால னிடத்தில் துன்மார்க்கமான கருத்தைக் கொண்டவளன்று ஆனாலும் அவள் செய்த அற்பப் பிழையினால் அவளது திடமான மனம் கோழைத்தனம் அடைந்து விட்டது. அவளது ஒவ்வோர் அங்கமும் அவள் குற்றவாளிதான் குற்றவாளிதான் என்று பறைசாற்றுவது போல, ஆயிரம் நாக்குகள் கொண்டு விளம்பரப்படுத்தியது. அப்போது ஜன்னலிற்கப்பால் ஒளிந்திருந்த இளங்குமரிகள் இருவரும், திகைப்பும் திக்பிரமையும் கொண்டு பேச்சு மூச்சற்று, சித்திரப் பதுமைகள் போல அசைவற்று அப்படி யப்படியே நின்றனர். துரைஸானியம்மாள் கீழே தொங்கிய தனது கையால், கோமளவல்லியை இடித்திடித்து, அவளது அவ நம்பிக்கையை விலக்கிக் கொண்டிருந்தாள்.

பசவண்ண செட்டியாரோ பெண் பேதையான ஒரு ஸ்திரியைச் சித்திரவதை செய்கிறோமே என்ற தயாளம் சிறிதுமின்றி மேலும் அவளைப் பார்த்து, “என்ன அம்மணி பேசாமல் கீழே குனிந்து கொண்டு நிற்கிறீர்களே! என்னவோ நல்ல அழகான உத்தம லட்சனங்கள் பொருந்திய மனிதனைக் கண்டால், ஆண்பிள்ளை களின் மனசிலேயே ஒரு விதமான சபலம் ஏற்படும்போது பெண் பிள்ளைகளின் மனசில் அப்படிப்பட்ட ஆசை உண்டாவது இயற்கைதான். அதிலும், அபாரமான செல்வத்திலும் சுகத்திலும் இருந்து, செழுமையாக வளர்ந்துள்ள ஸ்திரீ தன்னுடைய யெளவனப் பருவத்தில், பல வருஷங்களாக புருஷ சுகத்தையே அடையக்கூடாமல் இருந்து வந்த அந்த ஜெமீந்தாரிணியின் மனம் சஞ்சலப்பட்டதென்றால், அதைப் பற்றி அந்த அம்மாளை எவரும் அதிகமாகத் தண்டிக்க மாட்டார்கள். ஏனெனில், அது சாஸ்திரப்படி தவறானதானாலும், மனித சுபாவத்துக்கு ஒத்ததே. அந்தப் பையன் என்ன செய்தான் என்றால், அந்த அம்மாளை அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/22&oldid=646031" இலிருந்து மீள்விக்கப்பட்டது