பக்கம்:மதன கல்யாணி-2.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 24?

செட்டியார்:- மெய்தான். நீங்களோ அதி பாலியமானவராக இருக்கிறீர்கள்; ஸ்திரீகளின் விஷயத்திலோ அபாரமான அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறீர்கள். நீங்கள் இதுவரையில் ஒரு சுமார் எத்தனை ஸ்திரிகளை அனுபவித்திருப்பீர்கள்? இந்தத் துறையில் நீங்கள் எத்தனை வருஷ காலமாக அனுபவம் சம்பாதித்து வருகிறீர்கள்.

துரைராஜா:- (மிகவும் பெருமையாக) நான் பதினைந்தாவது வயசில் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போதே எனக்கு இந்த விஷயத்தில் அனுபவம் ஏற்பட்டது. கல்வியில் எனக்கு ஒரு சரஸ்வதியின் கருணாகடாக்ஷம் ஏற்படாவிட்டாலும், இந்தக் கல்வியில் எத்தனையோ சரஸ்வதிகளின் கிருபாநோக்கம் ஏற்பட்டு விட்டது. அது முதல் இதுவரையில் எனக்குச் சுகம் கொடுத்த ஸ்திரீகளின் தொகை ஒரு சுமார் ஆயிரம் இருக்கலாம்.

செட்டியார்:- (மிகுந்த மகிழ்ச்சியடைந்தவராய்) அப்படியானால், நீங்கள் முதல் வகுப்பில் தேறியவர்கள்தான். ஆனால், எனக்கு இன்னொரு சந்தேகம் உண்டாகிறது. நீங்கள் இதுவரையில் ஒரு சுமார் ஆயிரம் ஸ்திரீகளுடைய நட்பைச் சம்பாதித்துக் கொண்ட தாகச் சொல்லுகிறீர்களே. அவர்கள் எல்லோரும் தாசியின் வகுப்பைச் சேர்ந்தவர்களா? அல்லது, குடும்ப ஸ்திரீகளா?

துரைராஜா:- தாசிகள் சுமார் 100-பேர் இருக்கலாம். மற்ற எல்லோரும் குடும்ப ஸ்திரிகளே. அந்தக் குடும்ப ஸ்திரீகளும் பெரும்பாலோர் சொந்தப் புருஷனுக்கு உள்பட்டவர்கள்.

செட்டியார்:- (கரைகடந்த மகிழ்ச்சி அடைந்தவர் போல நடித்து) ஆகா! பலே பலே! நீங்கள் இந்த ராஜதானிக்கு முதல் பையனாகத் தேறியவர்கள் என்றே மதிக்க வேண்டும். இது தான் சாமர்த்தியம்! கொண்ட புருஷனுக்கு அடங்கியுள்ள ஸ்திரீகளை அந்தப் புருஷன் மார்களுக்குத் தெரியாமல் அடைவது தான் பரமசுகம்; அது தான் மிகுந்த சூரத்தனம். நீங்கள் இவ்வளவு அபாரமான சக்தி வாய்ந்த மகான் என்ற விஷயம் உங்களுடைய பெரிய தகப்பனாருக்கு இது வரையில் கொஞ்சம்கூடத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தாலும் இதன் அருமை அவருக்குத் தெரியப் போகிறதில்லை. அவர் மிகுந்த சந்தோஷம் அடைவதற்குப் பதிலாக, அளவற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/245&oldid=646081" இலிருந்து மீள்விக்கப்பட்டது