பக்கம்:மதன கல்யாணி-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 289

ஆள்களோடு இன்றைய தினம் வந்து பெண்ணை பலவந்தமாக எடுத்துப் போக ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகக் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் எல்லோரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நமக்கு சைதாப்பேட்டையிலிருந்து இன்னம் ஆள்கள் வரப் போகிறார்கள். போலீசாரும் வந்து பந்தோபஸ்தாக இருப்பார்கள். நீங்கள் எல்லோரும் உடனே போய் நாற்புறங்களி லும் இருந்து கவனித்துக் கொண்டிருங்கள். எவனாவது உத்தர வில்லாமல் உள்ளே வந்தால், அவனை விடவேண்டாம். உடனே அந்தச் சங்கதியை எங்களுக்குத் தெரிவியுங்கள்” என்றார்.

அந்தச் செய்தியைக் கேட்ட ஆட்கள் மிகுந்த பதைப்பும் கோபமும் அடைந்து, “ஆகா! அவ்வளவு தூரத்துக்கு வந்து விட்டதா எவன் வந்தாலும் வரட்டும். நாயை அடிப்பது போல அவனை அடித்து இடுப்பை முறித்து இந்தப் பங்களாவிலேயே உயிரோடு சமாதி வைத்து விடுகிறோம்” என்று வீறாப்பு மொழிகள் பேசிக் கொண்டு வெளியே போய் பாணாத்தடிகளோடு பங்களா வின் நாற்புறங்களிலும் நின்று பாராக்கொடுக்கத் தொடங்கினர்.

அதன் பிறகு சிவஞான முதலியார் கல்யாணியம்மாளை நோக்கி, “நான் போலீஸ் கமிஷனருடைய கச்சேரிக்குப் போய் இந்த டிவிஷன் இன்ஸ்பெக்டரைக் கண்டு தக்க ஏற்பாடுகள் செய்து விட்டு அதிசீக்கிரமாக வந்து சேருகிறேன். அதற்குள் நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள்; அந்தப் பெண் ஒரு பக்கத்திலும் நீங்கள் ஒரு பக்கத்திலுமாக இருப்பது சரியல்ல. இனிமேல், அந்தப் பெண் உங்களுடைய கண் பார்வையிலே தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்களை எல்லாம் நீங்கள் இங்கே அழைத்துக் கொண்டு வருவது இப்போது நன்றாக இருக்காது. ஆகையால் நான் வருகிற வரையில் நீங்கள் அங்கேயே இருங்கள். அதன் பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொல்லுகிறபடி நடந்து கொள்ளுவோம்” என்று கூற, கல்யாணியம்மாள் அதை ஒப்புக் கொண்டாள். இருவரும் உடனே அந்த அந்தப்புரத்தை விட்டு வெளிப்பட்டனர். கல்யாணியம்மாள் அதன் வெளிக் கதவை மூடிப் பூட்டிக்கொண்டு துரைஸ்ானியம்மாளினது அந்தப்புரத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்.

அவ்விடத்தை விட்டுப் புறப்பட்ட சிவஞான முதலியார் பங்களாவின் நாற்புறங்களிலும் சென்று சுற்றிப் பார்த்து ஆங்காங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/293&oldid=646176" இலிருந்து மீள்விக்கப்பட்டது